Saturday, December 29, 2018

கண்ணதாசன்

"காலமெனும் தெய்வமகள் கையிலுள்ள துலாக்கோலில்
எந்தஎடை எப்போழுது எவ்வளவென்று யாரறிவார்.
முன்னுமொரு காலமதில் மலையேற்றி வைத்தாலும்,
பின்னுமொரு காலமதில் பெரும்பள்ளம் தோன்றிவிடும்.
ஒரு நாள் உடல் உனக்கு உற்சாகமிருக்கும் - மறுநாள்
தளர்ந்து விடும் மறுபடியும் தழைத்து விடும்.

ஆள் ,அம்பு, சேனையுடன் அழகான வாழ்வு வரும்.
நாள் வந்து சேர்ந்து  விட்டால்! நாளும் கருகிவிடும்.
எல்லோருக்கும் ஏடெழுதி இறைவன் வைத்திருக்க,
பொல்லாத காலமென புலம்புவதில் லாபமென்ன ?
ஜாதகத்து ராசியிலே சனிதிசையே வந்தாலும்,
பாதகத்தை வழங்காமல் பரிசு தரும் காலம் வரும்.


எவனோ ஒருவன் உனைனேற்றி புகழ்வதுண்டு,
மகனே! தலையெழுத்தாய் மாற்றம் பெறுவதுண்டு.
பல்லாயிரம் ஆண்டு பாராண்ட தலைமுறையும்,.
செல்லாத காசாகி தெருவிலே அலைவதுண்டு.
மன்னர்கள் போனதுண்டு மந்திரிகள் வந்ததுண்டு.
மந்திரியை அழித்து விட்டு மாசேனை ஆள்வதுண்டு.

 மாசேனை நடுவினிலே விளையாடும் ,!  காலமகள், 
சதிசெய்வாள் ! சிலநேரம் தர்பாரில் ஏற்றிவைப்பாள்.
இன்னதுதான் இப்படித்தான் என்பதெல்லாம் பொய்கணக்கு.
இறைவனிடம் உள்ளதடா எப்போதும் உன் வழக்கு.
நாளை பெரும் நன்மை நடக்குமென விதி இருந்தால்!
இன்று பொழுதெல்லாம் இடுக்கண்ணே வந்து நிற்கும்.


போகின்ற வண்டியெல்லாம் ஊர் சென்று சேர்ந்து விட்டால்,
தேடுகின்ற கோவிலை நீ, தேடாமல் போய்விடுவாய்.
காதலியாய் வேஷமிட்ட கட்டழகு நடிகையெல்லாம்.
தாயாய் வேஷமிட்டு தடியூன்றி வருவதெல்லாம்.
காலமகள் விட்டெறிந்த கல்லால் விளைந்த கதை.
சட்டியிலே வேகின்ற சரக்கெல்லாம் சத்தானால்!

மட்டின்றி படித்து வந்த மருத்துவருக்கு வேலையென்ன?
ஆலமரம் தளருங்கால் அடிமரத்தை விழுது தொடும்.
நீ இழந்த பெருமையெல்லாம் நின்மக்கள் பெறுவதுண்டு.
நீ இழந்த செல்வமெல்லாம் நின்பேரன் அடைவதுண்டு.
வளமான ஊருணி நீர் வற்றாமலே இருந்தால்,
புதிதான நீர்  உனக்கு பூமியிலே கிடைக்காது!


இதனாலே, சோர்வடைந்தால் அடுத்த கடை திறக்காது.
ஞானத்திலே நீ ஒருவன் நடந்து உன் நாடகத்தை,
காலத்தின் சிந்தனையின் கனவேனவோ? நனவெனவொ ? "
                                                
                                                                               கவிஞர் கண்ணதாசன். 

Friday, November 16, 2018

பஜாரித்தனமான பகல் கொள்ளை

ஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வு....
திருப்பூர் ஊத்துகுளி சாலையில் உள்ள...நண்பரின் நண்பர் ஏற்றுமதி நிறுவனத்தில்
மின் அளவி (மீட்டர்) பழுதாகி மின் தடை ஏற்பட்டதால் சம்பந்தபட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார்கள்....
மீட்டருக்கான கட்டணம் போக ”முறைப்படி” கட்ட வேண்டிய கட்டணத்தையும் சொல்லியிருக்கிறார்கள்...கிட்டதட்ட ஒரு அரசு ஊழியரின் ஒரு மாத சம்பளமான முப்பது ஆயிரங்கள் ....மின் தடையிலும் ஷாக் அடித்ததைவிட அதிக அதிர்ச்சி அடைந்து ... நண்பர் மூலம் என்னை அழைத்தார்கள்...
ஒரே போன்.... யாருக்காக பணம் கேட்கபட்டதோ அந்த ”அம்மையாருக்கே”
தொடர்பு கொண்டுஎன்னா ”முடி”க்கு இந்த பணம்”... எனவும்... அவர்களுக்கும் தெரிந்த சில சட்ட சங்கதிகளை சொல்லி ... இரண்டு நிமிட ”சிறப்புரை”க்கு பின்.... அலுவலகத்துக்கு வாங்க பேசிக்கலாமுன்னு சொல்ல.... பேரம் பேசவானு கேட்க... இல்லை இல்லை நேரில் வர சொல்லுங்க...உடனே சரி செய்து தருகிறோம் என சொல்ல...
உடன் அரசு நிர்ணய்த்த தொகை மட்டுமே செலுத்தி மீட்டர் மாற்றி மின் தடை நீங்கியது....
மூன்று நாள் மின் தடையால் கிட்டதட்ட ”பஜாரி”த்தனமாக அவர்கள் கேட்ட முப்பது ஆயிரங்களுக்கும் மேல் உற்பத்தி இழப்பு.... இருந்தும் போரடி பெற்றதில் நண்பருக்கும் நண்பரின் நண்பருக்கும் அளவற்ற ஆனந்தம்....
சந்தோசத்திலும் பெரிய சந்தோசம் அடுத்தவங்க சந்தோசத்தை பார்ப்பது தானே.....
பல ஆயிரம் கோடிகள் நட்டத்தில் மின் வாரியமும் அரசும் தள்ளாட அதைவிட பல்லாயிரம் கோடிகள் இது போன்ற அதிகாரிகளின் கைக்கு போகிறது....

கொசுறு தகவல்- மேற்கண்ட சம்பவத்தில் சமபந்தபட்ட அதிகாரியின் கணவரே “என் மனைவி அளவுக்கு அதிகமாக லஞ்சம் வாங்குகிறார். நடவடிக்கை எடுங்கள்” என உயரதிகாரிகளுக்கு புகார் செய்ததால் திருப்பூருக்கு மாறுதல் ஆகி வந்ததாக கேள்வி.... திருப்பூருக்கு மாறுதல் செய்து ”தண்டனை” கொடுத்த அந்த உயரதிகாரிக்கு கோவில் கட்டித்தான் கும்பிடனும்....

யாராவது எந்த அலுவலகம் .... எந்த அதிகாரி ... என்ன போன் நம்பருனு தேடி கண்டு பிடிச்சு.... அர்ச்சனை செய்து சந்தோசபட்டால் சமூகம் பொருப்பல்ல.... ஏன்னா....
சந்தோசத்திலும் பெரிய சந்தோசம் அடுத்தவங்க சந்தோசத்தை பார்ப்பது தானே.....