Tuesday, September 1, 2015

நானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....

என்ன கொடுமை சார் இது....

மேலை நாட்டில் அவனவன் வேலையை
செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்.....
..
கீழை நாட்டில் அவன் வேலையை விடுத்து
அபாயகரமான செயல் செய்ய லஞ்சம் வாங்குகிறான்...
..
பாழாய்ப்போன பாரதத்தில் தான் அவன் வேலையை அவன்
செய்யவே லஞ்சம் வாங்குகிறான்... என
எங்கோ படித்த ஞாபகம்....
...
அட அஞ்சு பத்து ... வாங்குவதற்கே .... பயந்து பயந்து
வாங்குறவங்க மத்தியில ....
கூசாம வெளிப்படையா ... 100 சதம் பணம் அதிகம் கேட்டு
வாங்கறாங்களேன்னு கோபபட்டா.... எதிர்த்து கேட்டா...
 நம்மளை பொழைக்க தெரியாதவன்னு முத்திரை குத்தறாங்க.....
உனக்கு இதே வேலையா போச்சுன்னு திட்டறாங்க....

சரிப்பா...
வம்பு வழக்கு இல்லாம ஒரு வேலை செய்யலாமுன்னு..
என்னோட கடைக்கு தனி EB லைன் எடுக்க... போனேன்...
மூனு மாசமா அதை கொண்டா...
இதை கொண்டா... அப்படி பண்ணு ... இப்படி பண்ணு...னு
சொல்லி ஒரு வழியா பணத்தை கட்டுங்க ...
லைன் கொடுத்தடலாமுன்னு நேத்து சொன்னாங்க...

எவ்வளவுன்னு கேட்டா ....
மூவாயிரம் ரூபான்னாங்க .....
அடிச்சு பிடிச்சு.... அடகு வச்சு ....நானும் கட்டினேன்....
இது போக ... லைன் மேனுக்கும் ....
போர் மேனுக்கும் தனியா அழுகனுமாம்...
பில்லு நாளைக்கு வாங்க ... வாங்கிக்கலாமுன்னாங்க....
அதுக்கும் சரின்னேன்..

இன்னைக்கு போனா....
50 ரூபாய்க்கு ஒன்னும் 1550 ரூபாக்கு ஒன்னும் கொடுத்தாங்க...
மீட்டர் வர ஒரு மாசம் ஆகும் ....
போனு பண்ணுவோம் .. அப்பறமா வாங்கன்னு சொன்னாங்க...
சரின்னு வந்துட்டேன்..... என்ன பண்ணறது...

லஞ்சம் கொடுத்தும் ஒரு மாசம் காத்திருக்கனுமாம்....
அப்பறம் என்னா டேஸுக்கு  அதிகமா பணம் வாங்கனும்...
அய்யய்யோ... நான் கோபபடல..சாரி....
.. சரி...சரி...விட்டுடலாம்....
நானும் பொழக்கனுமில்ல....
இப்பவாவது நான் நல்லவன்னு ஒத்துக்கங்க....
ஹய்யா.... 
நானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....
நானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....
...
ஒரு நிமிசம்...
என்னதுங்க.... எந்த ஆபிஸ்ங்களா....
திருப்பூர் தாராபுரம் ரோடுங்க....
அவங்க பேருங்களா....
எனக்கு தெரியலைங்க.....
என்னங்க...பணம் கேட்டதுக்கும், வாங்குனதுக்கும் ...அத்தாட்சியா....
இருக்குதுங்க... இருந்தும் என்ன பண்ண முடியுங்க.... 
அவங்க போன் நம்பர்ங்களா....
அது ...அது .....வந்து...
97894 84851...
AE-94458 51395 ... 
யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.......
அய்யய்யோ ... 
போனு கீனு பண்ணிடாதீங்க...
இப்படித்தான் ஆடு  வாங்க லோனு வாங்குனவரு...
லஞ்சம் தராததால.. அந்த ஆடு குட்டியே போடலையாம்....
....
அய்யோ  ... அய்யய்யோ ...
நான் எதுமே எதுத்து கேக்கலைங்க....
பணத்தை திருப்பி கொடுத்தா வாங்கிக்குவேன்னுங்க...
(ஏன்னா அடகு வச்ச நகையை மூட்டுடலாம் பாருங்க)
ஆனா கொடுக்கவா போறாங்க...
முதலை வாய்ல மாட்டுனா .. தப்ப முடியுமா...
அப்பறம் கொடுக்கலைனா...
கரண்ட் வராது... விட்டு விட்டு வரும்...
அப்பறம் அது சரியில்ல ... இது சரியில்லனு...
குத்தம் சொல்லுவாங்க.... நமக்கெதுக்கு வம்புங்க....
போனா போகட்டும் விடுங்க....


பிளாஸ் நீயூஸ்...
3.9.2015 காலை 10 மணியளவில்... 
மின் அலுவலக ஊழியர்கள் இருவர் நேரில் வந்து மீதம் 
பணம் ரூ.1400 ஐ  திருப்பி தந்து விட்டார்கள்...
அழைத்து பேசிய நண்பர்களுக்கு நன்றி...

எங்க வீட்டுக்கு மின் இணைப்பு வாங்கிய கதையை படிக்க...