Monday, July 8, 2013

எனது முகநூல் பக்கதிலிருந்து....

நம் கைக்கு வரும் பெரிய தொகைகள் கூட
மதிப்பில்லாத சிறியதொகையாக `இவ்வளவுதானா`
என்ற ஏக்கத்தோடு வாங்க வேண்டியதிருக்கிறது...

நாம் கொடுக்கும் சிறிய தொகையை கூட
`இவ்வளவு` கொடுக்கனுமா? என்ற
அங்கலாய்ப்பு மனதை விட்டு அகல மறுக்கிறது......

எனக்கும் மட்டும் தான் இப்படியா......?

....

கொங்கு தனி மாநிலத்தை உருவாக்குவோம்-பெஸ்ட் ராமசாமி

எதுக்குங்க சார் .... ரம்மி ஆடவா..... 
(திருப்பூர் நண்பர்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்)

...

தமிழகத்தில் மேலும் 11 லட்சம் 
மின் இணைப்புக்கள் வழங்கப்படும்,- முதல்வர்.....

ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லை...
அவனுக்கு 56 பொண்ட்டாட்டி கேக்குதாமாம்.........?....

...

தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - தமிழக அரசு...

ஜூன் 3 ன் தேதி கலைஞரின் பிறந்தநாள் என்பதால், கலைஞரின் பிறந்த நாளை கொண்டாடவே விடுமுறை ....

...

நிறைவேறாத காதலும் காமமும்
சில நேரங்களில்
கற்பனை துளிகளிலேயே முடிந்துவிடுகின்றன

...

எதுவும் கடந்து போகும் 
என்பதையும் கண்டு கொண்டேன்...
பொறமையை கூட
பொசுக்க கற்று கொண்டேன்...
துரோகத்தையும் ஏற்கும் 
பக்கவம் அடைந்து விட்டேன்...
கோபத்தை கூட 
கொன்றொழித்து விட்டேன்...
மோகத்தை வெல்ல ஒரு வழி கண்டேன்
எனில் ஞானம் தனை அடைந்திடுவேனே .....

...

டீசல் பெட்ரோல் விலை ஏறிவிட்டது என்று மக்கள் யாரும் நடந்தா போகிறார்கள்......-ஞானதேசிகன்-

நான் அப்பவே சொன்னேன்ல...
தம்பி பார்க்கத்தான் பொரி உருண்டை மாதரி இருப்பாரு ..
நல்லா கருத்தா பேசுவாப்லன்னு...

...