மைதிலி என்னை காதலி என்று
விவரம் இல்லா வயதில் விளையாடி திரிந்தவளோ
இன்று விண்ணை தொடும் மாளிகையில்
சிங்கார சிங்கப்பூரில் வாழ்கிறாள் ...
தனலட்சுமி போல தரணியில் இவளுடன் வாழலாம் என
மனகோட்டையில் மண் வீடுகட்டி வளர்ந்தவளோ
தலைநகர் சென்னைக்கு வாக்கபட்டு செழுமையாக வாழ்கிறாள்...
எண்ணும் எழுத்தும் கண்ணனென தகும் என
கனிவுடன் கற்று கொடுத்து அக்கறையாக
அன்பு செழுத்திய கெளரியோ சாப்ட்வேர் இன்சினியர் ஆகி
ஐதாராபாத்தில் அவள் கணவனோடு காலந்தள்ளுகிறாள்...
கட்டிக்கட்டு புள்ளகுட்டி பெத்துக்கிட்டு வாழலாமுன்ன சுதாவை
பட்டிக்காட்டு மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்து
கொசுவம் கட்டிகிட்டு ஆட்டுகுட்டி மேச்சுகிட்டு பொலப்பை
ஓட்டிகிட்டு இருக்கிறாள்......
பள்ளி விட்டதும் பறந்து வந்து பார்த்தால்தான்
பதைபதைக்கும் மனசு பண்படுதுன்னு சொன்ன
சாந்தியோ சகலமும் மறந்து கேண்டீன்காரனை கட்டி
கேட்பாரின்றி சாந்தியிழந்து தாய் வீட்டில்....
பேரிட்சை பழம் போல பெரிய உதட்டுக்காரி
சாவகாசமாய் சிறைபடுத்திய சந்தியா...
கொங்கு மண்ணில் கோலாகலமாக வாழ்கிறாள்
இன்னும் இன்னும்.....
வசதியை மட்டுமே பார்த்த வசந்தி,
தேடி வந்த தேவதை தேவி,
அருமையான காதலி அருணா,
அன்பான அமுதா,
சொல்லி கொடுத்த வாசவி,
மறக்க முடியாத சங்கீதா...
வியாக்கியனமான வித்யா....
ஜெயா..
உங்களின் ஞாபகங்கள் என்றும் என்றென்றும் பசுமை மாறாமல்
நீக்கமற நிறைந்திருக்கும் என் நெஞ்சத்தில்....
அன்புடன்....சரவணபிரகாஷ்...
விவரம் இல்லா வயதில் விளையாடி திரிந்தவளோ
இன்று விண்ணை தொடும் மாளிகையில்
சிங்கார சிங்கப்பூரில் வாழ்கிறாள் ...
தனலட்சுமி போல தரணியில் இவளுடன் வாழலாம் என
மனகோட்டையில் மண் வீடுகட்டி வளர்ந்தவளோ
தலைநகர் சென்னைக்கு வாக்கபட்டு செழுமையாக வாழ்கிறாள்...
எண்ணும் எழுத்தும் கண்ணனென தகும் என
கனிவுடன் கற்று கொடுத்து அக்கறையாக
அன்பு செழுத்திய கெளரியோ சாப்ட்வேர் இன்சினியர் ஆகி
ஐதாராபாத்தில் அவள் கணவனோடு காலந்தள்ளுகிறாள்...
கட்டிக்கட்டு புள்ளகுட்டி பெத்துக்கிட்டு வாழலாமுன்ன சுதாவை
பட்டிக்காட்டு மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்து
கொசுவம் கட்டிகிட்டு ஆட்டுகுட்டி மேச்சுகிட்டு பொலப்பை
ஓட்டிகிட்டு இருக்கிறாள்......
பள்ளி விட்டதும் பறந்து வந்து பார்த்தால்தான்
பதைபதைக்கும் மனசு பண்படுதுன்னு சொன்ன
சாந்தியோ சகலமும் மறந்து கேண்டீன்காரனை கட்டி
கேட்பாரின்றி சாந்தியிழந்து தாய் வீட்டில்....
பேரிட்சை பழம் போல பெரிய உதட்டுக்காரி
சாவகாசமாய் சிறைபடுத்திய சந்தியா...
கொங்கு மண்ணில் கோலாகலமாக வாழ்கிறாள்
இன்னும் இன்னும்.....
வசதியை மட்டுமே பார்த்த வசந்தி,
தேடி வந்த தேவதை தேவி,
அருமையான காதலி அருணா,
அன்பான அமுதா,
சொல்லி கொடுத்த வாசவி,
மறக்க முடியாத சங்கீதா...
வியாக்கியனமான வித்யா....
ஜெயா..
உங்களின் ஞாபகங்கள் என்றும் என்றென்றும் பசுமை மாறாமல்
நீக்கமற நிறைந்திருக்கும் என் நெஞ்சத்தில்....
அன்புடன்....சரவணபிரகாஷ்...