Thursday, March 19, 2015

புயலென புறப்படு என் தோழா......

மின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்...
17.03.2015 எனது முகநூல் பதிவை தொடர்ந்து 
உறவினர் வீட்டு மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய 
வேண்டும் எனக்கேட்டு வந்திருந்தார்...இன்று (19.03.2015)

தேவையான ஆவணங்களை இணைத்து 
விண்ணப்பம் எழுதி
திருப்பூர் குமார் நகரில் உள்ள
“செயற்பொறியாளர்” அலுவலகத்திற்கு அனுப்பினேன்...
ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்
1.மூலபத்திரம் 
2.வி.ஒ.ஏ சான்று...
3. பத்திரத்தில் பிழை உள்ளது அதை திருத்தி புது பத்திரம்... ஆகியன
கொண்டு வரவும் என திருப்பி அனுப்பி விட்டார்கள்...

(பத்து வருடங்களுக்கு முன் இவர்கள் சொத்து வாங்கும் போது 
ஆவணத்தில் மின் இணைப்பை பற்றி குறிப்பிடவில்லை)...

விவரம் தெரிந்த நண்பர்களை தொடர்பு கொண்டு ...
விசாரித்து இணையம் மூலம் மின் ஒழுங்கு முறை ஆணைய
இணைய பக்கத்தில் “பெயர் மாற்றம்” செய்ய விண்ணப்பிக்க
தேவையான ஆவணங்கள் பற்றி தேடி நகலெடுத்தேன்....

இந்த அறிவிப்பின் மூலம்...சொத்து ஆவண நகல்..... அல்லது 
தகுந்த அதிகரியின் சான்றொப்பமிட்ட ....
 வீட்டு வரி ரசீது,தண்ணீர் கட்டண ரசீதுகளில் 
ஏதேனும் ஒன்று .... அல்லது ... வட்டாட்சியர் சான்று ..  
இவற்றில் ஏதேனும் ஒரு நகல் போதும்....

யோசித்தேன் .... நமக்கு வேலை உடனே ஆகனும்... .
நேராக பெரிச்சிபாளையம் மாநகராட்சி பள்ளிக்கு சென்று 
தலைமை ஆசிரியையிடம் உதவி கேட்டேன்...

“நீங்கள் மக்களுக்காக உதவி செய்கிறீர்கள்”
என்னால் ஆனதை உங்களுக்கு செய்கிறேன்...  எனச் சொல்லி
வீட்டு வரி ரசீது நகலில் சான்றொப்பமிட்டு தந்தார்... 
நன்றி சொல்லி விடை பெற்று நேராக ”செயற்பொறியாளர்” 
அலுவலகம் நோக்கி படையெடுத்தேன் “என் ஆயுதங்களுடன்”
...(போருக்கு கொண்டு சென்ற ஆயுதங்கள் பற்றி கடைசியில்)

அங்கே..
ஏற்கனவே திருப்பி அனுப்பிய அதிகாரி...
“ஏம்மா உங்களை தான் அப்பவே அனுப்பிட்டேனே மறுபடியும் 
எதற்கு வந்தீங்க”னு கேட்க....
அய்யா ஒரு நிமிடம்...னு நான் இடைமறித்து ...
விண்ணப்பத்தை நீட்டினேன்.... 
எல்லோருக்கும் சொல்லும் பல்லவியே பாடினார்...
அது வேண்டும்.... இது வேண்டும்...
. இதுவும் அதுவும் வேண்டும் என... சொல்லி...
மற்றவர்கள் விண்ணப்பத்தை காட்டி ... பாருங்கள்
எல்லோரும் கொடுத்திருக்கிறார்கள் ....
 நீங்களும் கொண்டு வாருங்கள்.... என்றார்...
நானோ “மற்றவர்கள் கொடுத்த ஆவணங்கள் பற்றி எனக்கு தெரியாது....
நாங்கள் என்ன கொடுக்க வேண்டும் என்பதை சொல்லுங்கள்....
எனக்கு மறந்து போகும் அய்யா ... ஆகவே எழுதி கொடுங்கள் என்றேன்....

அவரும் அக்கறையாக பேப்பரும் பேனாவும் எடுத்தார்... உடனே
நான் எழுதி உங்கள் பெயர் பதவியுடன் கூடிய அச்சு பதிந்து 
கையொப்பமிட்டு தாருங்கள் ... என கேட்டேன்... 
சுதாரித்த அவர்....
மேலதிகாரியை கை காட்டினார்.....

அவரிடம் சென்று சுருக்கமாக விபரம் சொல்லி ....
அவரும் ஆவணங்களை கேட்ட போது...
இணையத்தில் இருந்து எடுக்கபட்ட நகலை காண்பித்து 
இதில் குறிப்பிட்டபடி ஆவணங்கள் இணைத்துள்ளேன் ... 
அப்பறம் என்னங்க அய்யா.... என்றதும் ....
 முப்பது நொடிகள் மெளனத்திற்கு பிறகு ....
 அவர் பேனாவால் ஏதோ கிறுக்கி
பழைய அலுவலரிடமே அனுப்பினார்...

அதை பார்த்ததும் அவரின் உபசரிப்புக்கு அளவே இல்லை...
காத்திருந்த அனைவரையும் தவிர்த்து ...
முழுக்க முழுக்க அனைத்து வேலைகளையும் முடித்து...
முறைபடி கட்ட வேண்டிய பணத்தையும் அவரே வாங்கி 
செலுத்தி ரசீதும் பெற்று தந்து .... அனுப்பி வைத்தார்...

ஒரே ஒரு வீட்டு வரி ரசீது நகலில் முடிக்க வேண்டிய
வேலையை ... அங்கிருந்த ( அலுவல் நடைமுறை தெரியாத) அதிகாரிகளால்
மக்கள் அல்லோகலபடுவதை நினைத்து பெருமூச்சிட்டபடியே....
உதவிய உள்ளங்களுக்கு நன்றி சொல்லி கிளம்பினோம்....

அந்த ஆயுதங்கள்...
ஆம் ஆத்மி தொப்பியும் ...
சட்டையில் குத்தும் AAP பேட்சும்....










No comments: