Friday, November 16, 2018

பஜாரித்தனமான பகல் கொள்ளை

ஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வு....
திருப்பூர் ஊத்துகுளி சாலையில் உள்ள...நண்பரின் நண்பர் ஏற்றுமதி நிறுவனத்தில்
மின் அளவி (மீட்டர்) பழுதாகி மின் தடை ஏற்பட்டதால் சம்பந்தபட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார்கள்....
மீட்டருக்கான கட்டணம் போக ”முறைப்படி” கட்ட வேண்டிய கட்டணத்தையும் சொல்லியிருக்கிறார்கள்...கிட்டதட்ட ஒரு அரசு ஊழியரின் ஒரு மாத சம்பளமான முப்பது ஆயிரங்கள் ....மின் தடையிலும் ஷாக் அடித்ததைவிட அதிக அதிர்ச்சி அடைந்து ... நண்பர் மூலம் என்னை அழைத்தார்கள்...
ஒரே போன்.... யாருக்காக பணம் கேட்கபட்டதோ அந்த ”அம்மையாருக்கே”
தொடர்பு கொண்டுஎன்னா ”முடி”க்கு இந்த பணம்”... எனவும்... அவர்களுக்கும் தெரிந்த சில சட்ட சங்கதிகளை சொல்லி ... இரண்டு நிமிட ”சிறப்புரை”க்கு பின்.... அலுவலகத்துக்கு வாங்க பேசிக்கலாமுன்னு சொல்ல.... பேரம் பேசவானு கேட்க... இல்லை இல்லை நேரில் வர சொல்லுங்க...உடனே சரி செய்து தருகிறோம் என சொல்ல...
உடன் அரசு நிர்ணய்த்த தொகை மட்டுமே செலுத்தி மீட்டர் மாற்றி மின் தடை நீங்கியது....
மூன்று நாள் மின் தடையால் கிட்டதட்ட ”பஜாரி”த்தனமாக அவர்கள் கேட்ட முப்பது ஆயிரங்களுக்கும் மேல் உற்பத்தி இழப்பு.... இருந்தும் போரடி பெற்றதில் நண்பருக்கும் நண்பரின் நண்பருக்கும் அளவற்ற ஆனந்தம்....
சந்தோசத்திலும் பெரிய சந்தோசம் அடுத்தவங்க சந்தோசத்தை பார்ப்பது தானே.....
பல ஆயிரம் கோடிகள் நட்டத்தில் மின் வாரியமும் அரசும் தள்ளாட அதைவிட பல்லாயிரம் கோடிகள் இது போன்ற அதிகாரிகளின் கைக்கு போகிறது....

கொசுறு தகவல்- மேற்கண்ட சம்பவத்தில் சமபந்தபட்ட அதிகாரியின் கணவரே “என் மனைவி அளவுக்கு அதிகமாக லஞ்சம் வாங்குகிறார். நடவடிக்கை எடுங்கள்” என உயரதிகாரிகளுக்கு புகார் செய்ததால் திருப்பூருக்கு மாறுதல் ஆகி வந்ததாக கேள்வி.... திருப்பூருக்கு மாறுதல் செய்து ”தண்டனை” கொடுத்த அந்த உயரதிகாரிக்கு கோவில் கட்டித்தான் கும்பிடனும்....

யாராவது எந்த அலுவலகம் .... எந்த அதிகாரி ... என்ன போன் நம்பருனு தேடி கண்டு பிடிச்சு.... அர்ச்சனை செய்து சந்தோசபட்டால் சமூகம் பொருப்பல்ல.... ஏன்னா....
சந்தோசத்திலும் பெரிய சந்தோசம் அடுத்தவங்க சந்தோசத்தை பார்ப்பது தானே.....

Thursday, May 4, 2017

இணையம் மூலம் மின் இணைப்பு

நண்பர் ஒருவர் புதிய மின் இணைப்பு லஞ்சமில்லாமல் வேண்டும் 
என்ன செய்வது என கேட்க .. 
நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போனாலும் போகட்டும் நமக்கேன் வம்பு ... 
எனஒதுங்கியிருந்த மிருகம் விழித்தெழ.... 
பளிச்சென பல்ப் எரிந்தது...

இணையம் மூலமாக புதிய மின் இணைப்பு பதியலாமே என சம்பந்தபட்ட துறையிலிருந்த நலம் விரும்பும் நண்பரை அழைத்து விபரங்கள் கேட்டறிந்து....
புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்து
விண்ணப்ப கட்டணம் ரூ.50.ம் செலுத்தினேன்...
தேநீர் அருந்தும் நேரம் கூட செலவாகவில்லை....
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளபட்டதாகவும்...
சம்பந்தபட்ட அலுவலகத்தினர் தொடர்பு
கொள்வார்கள் எனவும்....
மின்னஞ்சல் உடனே வந்தது...
ஏழு நாளில் இணைப்பு வந்திடுமாம்...

பல நாள் அலைந்து பின்பு ...
அழைத்து களப்பணி பார்த்து காசு
அளந்து பின்பு விண்ணப்பம் வாங்கி ..
அதில் நொட்டை ... இதில் நொட்டை என
சாக்குச்சொல்லி... வற்றிய பசு மடியில் ரத்தம்
கறப்பது போல ஏழை வயிற்றில் அடித்து சம்பாதிக்கும் கொள்ளை கூட்டத்திடம் இருந்து தப்பிய நண்பர்
மகிழ்வுடன் சொன்னார்.... இது போன்ற வசதிகள்
அனைத்து துறைகளிலும் வரனும் ....னு...
என்ன வசதிகள் வந்தாலும் ....
சாமி வரம் கொடுத்தாலும்
பூசாரி கெடுக்கும் கதைதான் நடக்கும்... 
விண்ணப்பிக்க...
http://www.tnebltd.gov.in:8080/nsconline/

Tuesday, August 9, 2016

கேளுங்கள் ... கொடுக்கபடும் ...

”இலஞ்சமில்லா திருப்பூர்”.. வெற்றி சரித்திரம்...





கடந்த 30.07.16 அன்று, திருப்பூரில், 
நேர்மை மக்கள் இயக்கம் சார்பில், சகாயம் ஐ ஏ எஸ் அவர்களால்
"லஞ்சம் இல்லா திருப்பூர்" பரப்புரை தொடங்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர் R Anandan அவர்கள்
என்னிடம் தயக்கமாக மின் துறை சம்பந்தமான ஒரு 
பிரச்சனையை பற்றி சொன்னார். (நமக்கு அல்வாவாச்சே)
திருப்பூர் ஆண்டிபாளையம் மின் பிரிவு அலுவலகத்தில்
புது இணைப்பு வாங்க முறையாக பணம் கட்டி ரசீது 
வாங்கியாச்சு.. ஒரு மாசம் கழிச்சு வாங்கனு அலுவலர்கள் சொல்லியிருக்காங்க... . 
ஆனால் அங்கிருந்த “அன்பு” என்ற
அன்பே இல்லாத ஊழியர் “என்னை முறைப்படி கவனிச்சா
தான் உனக்கு லைன் வரும் ... இல்லைனா கரண்டே கிடைக்காம செஞ்சுருவேனு”
மிரட்டியிருக்கிறார்....
( அன்பு செல்வனின் அலைபேசி எண் 9842690890 )
நமக்காக நம் காசில் சம்பளம் வாங்கி வேலை செய்யும்
நம்ம வேலைக்காரன் ... நம்மை மிரட்டுவதா ... 
என்ன ஆனாலும் சரிங்க .... 
கரண்ட்டே கிடைக்காட்டியும் பரவாயில்லை...
 எதனாச்சும் செய்யுங்கனு..... 
நண்பர் ஆனந்தன் சொல்ல....

நமக்கேன் வம்பு .... இனி
எதிலும் ஒதுங்கி இருக்கலாம்... என நினைத்திருந்த
குரங்கு மனம் விழித்து கொண்டு.....
சின்ன கல்லை போடலாமுன்னு .... 
மின் மாவட்ட கண்காணிப்பாளருக்கு ஒரே ஒரு ...
மின்னஞ்சல் மட்டுமே தட்டிவிட்டேன்....
(setrpr@tnebnet.org )
ஒரு மாசம் கழித்து வரவேண்டிய மீட்டர்....
ஜீம்பூம்ம்பா.... போட்ட மாதரி....
இரு நாட்களில் மீட்டர் வந்து விட்டது ....னு சொல்லி
லைன் கொடுத்துட்டு சினேகமாக சிரித்துவிட்டு சென்றனர்...
மின் துறை ஊழியர்கள்....
தட்டுங்கள் ... திறக்கபடும்...
மெயிலை ... தட்டுங்கள்... லைன் கிடைக்கும்...
கேளுங்கள் ... கொடுக்கபடும் ...
லஞ்சமல்ல.... பில் தொகை மட்டுமே...

Tuesday, January 26, 2016

கேஷ் லஸ் ஆன கேஸ் கனைக்‌ஷன்.....

புதிய எரிவாயு உருளை வாங்க  விசாரித்தேன் ..
திருப்பூர் கெளரி துர்கா பாரத் கேஸ்-ல்...

பகல் கொள்ளையாக இருந்தது.....
அடுப்பு கட்டாயம் வாங்கனுமாம்....
இரண்டு சிலிண்டர் வேணுமுன்னா ..
ஏதாவது பொருள் வாங்கனுமாம்....
கிட்டதட்ட எட்டாயிரம் ரூபாயாம்....

யோசித்தேன் ...
இருக்கவே இருக்கு ...
கூகுள் ஆண்டவர் தேடினேன்..கிடைத்தது....

ஆன்லைன் மூலம் பணம் கட்டி
எரிவாயு உருளை இணைப்புக்கு விண்ணப்பித்தேன்..

பணம் செலுத்த ...இணைப்பு வாங்க...
நேரில் போகவே இல்லை ...

அலுவலகமே அல்லோல பட்டு ...
அலை பேசியது... ... இது என்ன முறை ...
எங்களுக்கே தெரியலை..னு கதறியது...

எனக்கொன்றும் அவசரமில்லை ...
முறை தெரிந்து .... வழி கண்டு ..... பின்பு வாருங்கள்...
என்று கூலாக சொன்னேன்... அலைபேசியில்...

ஏழாவது நாளில் ...
இரண்டு உருளையுடன் அடுப்பு தவிர
அனைத்து உபகரணங்களும் வீடு தேடி வந்தது...
மொத்த செலவு - ரூ.3570 மட்டுமே....
...
ஒரு மாதம் ஆகிருச்சு....
எரிவாயு மறு உபயோகத்திற்கும்
இணைய வழியில் பதிந்தேன்...
நம்மை பற்றி தெரிந்து கொண்ட இணையம்
”இப்போதே பணம் கட்டுகிறாயா”னு கேட்டுச்சு...

ஆஹா ...
அருமை என உடனே பணம் கட்டினேன்...

எந்தவிதமான பேரமும் பேசமால்...
0.00 என்ற  பில் தொகையுடன்....
இரண்டே நாளில் எரிவாயு உருளை வந்தது...

”அண்ணே....நீங்க தான் இந்த முறைப்படி பர்ஸ்ட் கஸ்டமர்”
என சிரித்தமுகத்துடன் எரிவாயு உருளை
விநியோகித்து சென்றார்... முகவரின் ஊழியர்...


மாற்று எரிவாயு உருளை பெற

- புதிய இணைப்பு பெற..

Tuesday, September 1, 2015

நானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....

என்ன கொடுமை சார் இது....

மேலை நாட்டில் அவனவன் வேலையை
செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்.....
..
கீழை நாட்டில் அவன் வேலையை விடுத்து
அபாயகரமான செயல் செய்ய லஞ்சம் வாங்குகிறான்...
..
பாழாய்ப்போன பாரதத்தில் தான் அவன் வேலையை அவன்
செய்யவே லஞ்சம் வாங்குகிறான்... என
எங்கோ படித்த ஞாபகம்....
...
அட அஞ்சு பத்து ... வாங்குவதற்கே .... பயந்து பயந்து
வாங்குறவங்க மத்தியில ....
கூசாம வெளிப்படையா ... 100 சதம் பணம் அதிகம் கேட்டு
வாங்கறாங்களேன்னு கோபபட்டா.... எதிர்த்து கேட்டா...
 நம்மளை பொழைக்க தெரியாதவன்னு முத்திரை குத்தறாங்க.....
உனக்கு இதே வேலையா போச்சுன்னு திட்டறாங்க....

சரிப்பா...
வம்பு வழக்கு இல்லாம ஒரு வேலை செய்யலாமுன்னு..
என்னோட கடைக்கு தனி EB லைன் எடுக்க... போனேன்...
மூனு மாசமா அதை கொண்டா...
இதை கொண்டா... அப்படி பண்ணு ... இப்படி பண்ணு...னு
சொல்லி ஒரு வழியா பணத்தை கட்டுங்க ...
லைன் கொடுத்தடலாமுன்னு நேத்து சொன்னாங்க...

எவ்வளவுன்னு கேட்டா ....
மூவாயிரம் ரூபான்னாங்க .....
அடிச்சு பிடிச்சு.... அடகு வச்சு ....நானும் கட்டினேன்....
இது போக ... லைன் மேனுக்கும் ....
போர் மேனுக்கும் தனியா அழுகனுமாம்...
பில்லு நாளைக்கு வாங்க ... வாங்கிக்கலாமுன்னாங்க....
அதுக்கும் சரின்னேன்..

இன்னைக்கு போனா....
50 ரூபாய்க்கு ஒன்னும் 1550 ரூபாக்கு ஒன்னும் கொடுத்தாங்க...
மீட்டர் வர ஒரு மாசம் ஆகும் ....
போனு பண்ணுவோம் .. அப்பறமா வாங்கன்னு சொன்னாங்க...
சரின்னு வந்துட்டேன்..... என்ன பண்ணறது...

லஞ்சம் கொடுத்தும் ஒரு மாசம் காத்திருக்கனுமாம்....
அப்பறம் என்னா டேஸுக்கு  அதிகமா பணம் வாங்கனும்...
அய்யய்யோ... நான் கோபபடல..சாரி....
.. சரி...சரி...விட்டுடலாம்....
நானும் பொழக்கனுமில்ல....
இப்பவாவது நான் நல்லவன்னு ஒத்துக்கங்க....
ஹய்யா.... 
நானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....
நானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....
...
ஒரு நிமிசம்...
என்னதுங்க.... எந்த ஆபிஸ்ங்களா....
திருப்பூர் தாராபுரம் ரோடுங்க....
அவங்க பேருங்களா....
எனக்கு தெரியலைங்க.....
என்னங்க...பணம் கேட்டதுக்கும், வாங்குனதுக்கும் ...அத்தாட்சியா....
இருக்குதுங்க... இருந்தும் என்ன பண்ண முடியுங்க.... 
அவங்க போன் நம்பர்ங்களா....
அது ...அது .....வந்து...
97894 84851...
AE-94458 51395 ... 
யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.......
அய்யய்யோ ... 
போனு கீனு பண்ணிடாதீங்க...
இப்படித்தான் ஆடு  வாங்க லோனு வாங்குனவரு...
லஞ்சம் தராததால.. அந்த ஆடு குட்டியே போடலையாம்....
....
அய்யோ  ... அய்யய்யோ ...
நான் எதுமே எதுத்து கேக்கலைங்க....
பணத்தை திருப்பி கொடுத்தா வாங்கிக்குவேன்னுங்க...
(ஏன்னா அடகு வச்ச நகையை மூட்டுடலாம் பாருங்க)
ஆனா கொடுக்கவா போறாங்க...
முதலை வாய்ல மாட்டுனா .. தப்ப முடியுமா...
அப்பறம் கொடுக்கலைனா...
கரண்ட் வராது... விட்டு விட்டு வரும்...
அப்பறம் அது சரியில்ல ... இது சரியில்லனு...
குத்தம் சொல்லுவாங்க.... நமக்கெதுக்கு வம்புங்க....
போனா போகட்டும் விடுங்க....


பிளாஸ் நீயூஸ்...
3.9.2015 காலை 10 மணியளவில்... 
மின் அலுவலக ஊழியர்கள் இருவர் நேரில் வந்து மீதம் 
பணம் ரூ.1400 ஐ  திருப்பி தந்து விட்டார்கள்...
அழைத்து பேசிய நண்பர்களுக்கு நன்றி...

எங்க வீட்டுக்கு மின் இணைப்பு வாங்கிய கதையை படிக்க...


Friday, August 7, 2015

லஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி?

திரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பதிவு செய்வது எப்படி ?. 2. பத்திர எழுத்தர் மூலமாக பத்திரம் எழுதும் போது எவ்வாறு லஞ்சம் தவிர்ப்பது ? 3. லஞ்சம் கொடுக்காமல் பத்திர பதிவு செய்யும் போது, நமக்கு பதிவு அலுவலகத்தில் ஏதேனும் இடையூறுகள், தடங்கல்கள் ஏற்படுமா ? 4. அவற்றை எப்படி சமாளிப்பது ? 5. வேறு முக்கிய விஷயங்கள் ஏதாவது உள்ளதா ?
என்பதையும் தெரியபடுத்துங்கள்..... நன்றி....

இது நண்பர் ஒருவரின் குறுஞ்செய்தியின் சாராம்சம்....

பலருக்கும் பயனுள்ள கேள்விகள் என்பதால் பதிவாக இங்கே...

முதலில் அனைவரும் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ளவும்..
ஆவணங்களை பதிவு செய்வது சார்பதிவாளர் மட்டுமே தான்...
 அவருக்கு தரகு வேலை செய்து கல்லா கட்டுவது தான்
இந்த ஆவண எழுத்தர்களின் பிரதான வேலை..

பதிவு செய்ய போகும் ஆவணங்களை ஆவண எழுத்தர் தான்
எழுத வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது....

ஆவணத்தை எழுதி கொடுப்பவர்கள் ( சொத்தை விற்பவர்கள்) மற்றும்
தகுதி வாய்ந்த வழக்குரைஞர்களும்    ஆவணங்களை எழுதலாம்..

ஆவண எழுத்தர்களுக்கு அனுபவங்கள் அதிகம் ஆகவே
அவர்களை நாடுகிறார்கள் நம் மக்கள் ...
அவர்களும் அடித்து விடுகிறார்கள்..
(ஆவணங்களை டைப் அடிப்பதை சொல்கிறேன்)

லஞ்சம் கொடுக்காமல் நீங்கள் பதிவு செய்ய நினைத்தால்....

1. நல்ல ஆவண எழுத்தர் ஒருவரை அணுகி தெளிவாக
”எனக்கு ஆவணங்களை தயார் செய்தால் போதும் நானே பதிவு
செய்து கொள்கிறேன்” எனக்கூறி அதன் சம்பந்தபட்ட நகல்களை
கொடுத்தால் அவர்கள் தயார் செய்து தருவார்கள்...
முதலிலேயே அவர்களுக்கான உண்டான கூலியை பேசிக்கொள்ளுங்கள்.
அரசு வழிகாட்டும் கூலியைதான் அவர்கள் வாங்க வேண்டும்...
உதாரணத்திற்கு ஒரு விற்பனை ஆவணம் என்றால் ரூ.50 மட்டுமே...
ஆனால் இது நடைமுறை சாத்தியமில்லை .ஆகவே நியாயமான முறையில்
இருதரப்பும் பேசி கூலியை நிர்ணயத்து கொள்ளவும்...

2.முதல் முறையாக இருப்பின் ஆவண எழுத்தரிடமே
நடைமுறைகளை பற்றியும், என்ன செய்ய வேண்டும் என்பதையும்
நட்பாக பேசி தெரிந்து கொள்ளுங்கள் ...

3.எவ்விதமான சந்தேகம் என்றாலும் சம்பந்தபட்ட சார்பதிவாளர்
உங்கள் சந்தேகம் தீர்வாகும் வரை விளக்க கடமைபட்டுள்ளார்
என்பதை மறவாதீர்கள்..

4.எவ்வளவு தொகைக்கு ஆவணங்கள் வாங்க வேண்டும் ..
எவ்வளவு தொகைக்கு வரைவோலை எடுக்க வேண்டும் என்பதையும்
ஆவண எழுத்தரிடமோ இல்லை சார்பதிவாளரை நேரில் அணுகியோ
தெரிந்து கொள்ளுங்கள்...

5. சார்பதிவாளர் ஏதேனும் சங்கடபட்டலோ எரிந்து விழுந்தாலோ...
ஆவண எழுத்தரிடம் கேட்க சொன்னாலோ...
அய்யா ... எந்தவிதமான புரோக்கர்களையும் அணுக நான் விருமப வில்லை
இந்த அலுவலகத்தின் அதிகாரி நீங்கள் தானே ...
என் சந்தேகங்களுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்... இல்லையென்றால்
தகுந்த அலுவலரை பதில் சொல்ல பணியுங்கள் என்று
மென்மையாக சொன்னால் உங்கள் வேலை சுமூகமாக முடியும்..

6.இது போலவே தான் வில்லங்க சான்றிதழ், சான்றிட்ட நகல், போன்ற
சார்பதிவாளர் அலுவலக வேலைகளையும் லஞ்சம் தராமல் உரிய
பணம் செலுத்தி பெறலாம்.

7.மக்கள் ஆட்சியில் மக்களே எஜமானர்கள் என்பதை மனதில் வைத்து
நம் செய்யும் செயல்கள் சட்டபடி இருந்தால்
லஞ்சம் கொடுக்காமல் எந்த செயலையும் செய்யலாம் ...

லஞ்சம் தவிர்.... நெஞ்சம் நிமிர்....


Wednesday, July 15, 2015

அம்மா உணவகம்

இன்றைய சைட் விசிட்...(15.07.2015)
திருப்பூர் அரசு மருத்துவமனை
 “அம்மா உணவகம்”...

காலை மணி 7.55...

மக்கள் கூட்டமே இல்லாமல் வெறிச்சென இருந்ததால்
செயல்படுகிறதா இல்லையா என்ற சந்தேகத்துடன்...
உள்ளே நுழைந்தால்...




அங்கொன்றும் இங்கொன்றுமாய் பதினொரு பேர்...
உணவருந்தி கொண்டிருந்தனர்...

சிறார் சட்டத்தில் திருத்தம் வந்ததாலோ என்னவோ...
ஒரு சின்ன பையன் சுறுசுறுப்பாக டோக்கன் கொடுத்து...
மீதி பணத்தை வேகமாக எண்ணி கொடுத்தான்...
ஏதோ முன்னூறு பேர் லைனில் நிற்பதாக நினைத்து...
(பின்னாடி நல்லா வருவான்)



பார்சல் கிடையாது என்று அறிவிப்பு பலகை இருந்தாலும்
மனிதாபிமானமா இல்லை மீதம் ஆகிடும் என்ற பயத்தாலோ 
ஜோராக பார்சல் வழங்கபட்டு கொண்டிருந்தது ...
வடநாட்டு  வாலிபர்கள் பார்சல் வாங்க...
தேவையான பாத்திரங்களுடன் வந்திருந்தார்கள்... 
(ரெகுலர் கஸ்டமர் போல)



அஞ்சு ரூபாய்க்கு அஞ்சு இட்லி வாங்கி அசைபோட்ட படியே
நோட்டமிட்டேன்...
நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும்.... உடன்
ஆட்டோ டிரைவர்களும் பசியாறினார்கள் ..
சாம்பார்  சூப்பர்...
இட்லிதான் கொஞ்சம் புளித்திருந்தது....
அப்படியே பிசைந்து உள்ளே இறக்கி பசியாறிய பின்...
சுத்தம் பற்றி ஞானம் வந்தது...

100 எழுமிச்சைகளின் சக்தி கொண்டு தட்டுகளை கழுவி.... பின்
குளிந்த நீர் .... வென்னீர் என மிக அருமையாக 
சுத்தமாக தட்டுகளை மட்டுமின்றி 
அனைத்து பாத்திரங்களையும் கழுவுகின்றனர்...

அரசு மருத்துவ மனை என்பதால் மட்டுமல்ல 
அனைத்து இடங்களிலும் இப்படித்தான் எனச்சொன்னார்கள்...
தினசரி ரூ.250 சம்பளம் வாங்கும்  மீனாட்சி சுய உதவி குழு பெண்கள்..

ஆனால் வந்து செல்லும் பொது மக்கள் செய்யும் 
அழிசட்டியங்களுக்கு  அளவே இல்லை...
ஆங்காங்கே வெற்றிலை.... பான்பராக் எச்சில்கள்....


கொள்கை ரீதியாக அம்மா உணவகங்கள் திட்டம் மீது 
வெறுப்பு இருந்தாலும் இது போன்ற 
அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்துவது வரவேற்கதக்கது..





Sunday, May 10, 2015

கல்வி பெறும் உரிமை.. கேட்டால் கிடைக்கும்

கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றி ...
எடுத்துக்கூறி ஏழை பெண் ஒருவரை
அவர் வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு...
RTE Act படி இவர்களுக்கு ஒரு விண்ணப்பம் வழங்கவும் என
கடிதம் கொடுத்தனுப்பினேன்...

யார் என்ன ஏது என விசாரித்து விட்டு...
என் கைப்பேசி எண்ணை வாங்கி அழைத்தார்...
அந்த தனியார் பள்ளி முதல்வர்..
எனக்கு வேலை கொஞ்சம் இருந்ததாலும் ...
புதிய எண்ணாக இருந்ததாலும்  கைப்பேசியை எடுக்கவில்லை ..

பள்ளி பெயரை குறிப்பிட்டு...
தான் பள்ளி முதல்வர் எனவும்
தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனவும் குறுஞ்செய்தி அனுப்பினார்...

தொடர்பு கொண்டேன்...
தங்கள் பள்ளி வளரும் பள்ளி எனவும்...
இது போன்ற சட்டங்களை பின்பற்றினால் .. நாங்கள்
பள்ளி நடத்துவது கடினம் எனவும் சொல்லி..
மேற்படி குழந்தைக்கு குறைந்த கட்டணமே
வசூலித்து கொள்கிறோம் .. என்றும் சொல்ல....
எனக்கு ஜிவ்வென்று ஏறியது.....

விண்ணப்பம் வழங்க முடியுமா முடியாதா...
முடியாதென்றால் சொல்லிவிடுங்கள் ..
நான் பார்த்துக்கொள்கிறேன்... என நான் சொல்ல...

உடனே அவர்
கட்டாய கல்வி சட்டத்தை அவர்கள் தாங்கி பிடிப்பது போல..
இந்த சட்டம் எஸ்சி..எஸ்டி-யினருக்கு மட்டுமே எனச்சொல்ல...
எழுத்துபூர்வமாக கொடுங்கள்  என நான் சொல்ல...
அந்நியன் போல மாறிவிட்டார்... அவர்..

நீங்கள் அனுப்பியவரை ..
கட்டாய கல்வி சட்டபடியே நாங்கள் சேர்த்துக்கொள்கிறோம்..
உடனே அவர்களை அனைத்து சான்றிதழ்களையும்
கொண்டு வந்து சேர சொல்லுங்கள் .. எனச்சொல்லி...
உங்களை நான் அவசியம் சந்திக்கனும் ...
பிரியா இருக்கும் போது வாங்கனு சொல்லி ...
வாயெல்லாம் பல்லாக அவர் சிரித்த சிரிப்பு ...
போனிலேயே எனக்கு தெரிந்தது...

கேட்டால் கிடைக்கும்





Thursday, March 19, 2015

புயலென புறப்படு என் தோழா......

மின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்...
17.03.2015 எனது முகநூல் பதிவை தொடர்ந்து 
உறவினர் வீட்டு மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய 
வேண்டும் எனக்கேட்டு வந்திருந்தார்...இன்று (19.03.2015)

தேவையான ஆவணங்களை இணைத்து 
விண்ணப்பம் எழுதி
திருப்பூர் குமார் நகரில் உள்ள
“செயற்பொறியாளர்” அலுவலகத்திற்கு அனுப்பினேன்...
ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்
1.மூலபத்திரம் 
2.வி.ஒ.ஏ சான்று...
3. பத்திரத்தில் பிழை உள்ளது அதை திருத்தி புது பத்திரம்... ஆகியன
கொண்டு வரவும் என திருப்பி அனுப்பி விட்டார்கள்...

(பத்து வருடங்களுக்கு முன் இவர்கள் சொத்து வாங்கும் போது 
ஆவணத்தில் மின் இணைப்பை பற்றி குறிப்பிடவில்லை)...

விவரம் தெரிந்த நண்பர்களை தொடர்பு கொண்டு ...
விசாரித்து இணையம் மூலம் மின் ஒழுங்கு முறை ஆணைய
இணைய பக்கத்தில் “பெயர் மாற்றம்” செய்ய விண்ணப்பிக்க
தேவையான ஆவணங்கள் பற்றி தேடி நகலெடுத்தேன்....

இந்த அறிவிப்பின் மூலம்...சொத்து ஆவண நகல்..... அல்லது 
தகுந்த அதிகரியின் சான்றொப்பமிட்ட ....
 வீட்டு வரி ரசீது,தண்ணீர் கட்டண ரசீதுகளில் 
ஏதேனும் ஒன்று .... அல்லது ... வட்டாட்சியர் சான்று ..  
இவற்றில் ஏதேனும் ஒரு நகல் போதும்....

யோசித்தேன் .... நமக்கு வேலை உடனே ஆகனும்... .
நேராக பெரிச்சிபாளையம் மாநகராட்சி பள்ளிக்கு சென்று 
தலைமை ஆசிரியையிடம் உதவி கேட்டேன்...

“நீங்கள் மக்களுக்காக உதவி செய்கிறீர்கள்”
என்னால் ஆனதை உங்களுக்கு செய்கிறேன்...  எனச் சொல்லி
வீட்டு வரி ரசீது நகலில் சான்றொப்பமிட்டு தந்தார்... 
நன்றி சொல்லி விடை பெற்று நேராக ”செயற்பொறியாளர்” 
அலுவலகம் நோக்கி படையெடுத்தேன் “என் ஆயுதங்களுடன்”
...(போருக்கு கொண்டு சென்ற ஆயுதங்கள் பற்றி கடைசியில்)

அங்கே..
ஏற்கனவே திருப்பி அனுப்பிய அதிகாரி...
“ஏம்மா உங்களை தான் அப்பவே அனுப்பிட்டேனே மறுபடியும் 
எதற்கு வந்தீங்க”னு கேட்க....
அய்யா ஒரு நிமிடம்...னு நான் இடைமறித்து ...
விண்ணப்பத்தை நீட்டினேன்.... 
எல்லோருக்கும் சொல்லும் பல்லவியே பாடினார்...
அது வேண்டும்.... இது வேண்டும்...
. இதுவும் அதுவும் வேண்டும் என... சொல்லி...
மற்றவர்கள் விண்ணப்பத்தை காட்டி ... பாருங்கள்
எல்லோரும் கொடுத்திருக்கிறார்கள் ....
 நீங்களும் கொண்டு வாருங்கள்.... என்றார்...
நானோ “மற்றவர்கள் கொடுத்த ஆவணங்கள் பற்றி எனக்கு தெரியாது....
நாங்கள் என்ன கொடுக்க வேண்டும் என்பதை சொல்லுங்கள்....
எனக்கு மறந்து போகும் அய்யா ... ஆகவே எழுதி கொடுங்கள் என்றேன்....

அவரும் அக்கறையாக பேப்பரும் பேனாவும் எடுத்தார்... உடனே
நான் எழுதி உங்கள் பெயர் பதவியுடன் கூடிய அச்சு பதிந்து 
கையொப்பமிட்டு தாருங்கள் ... என கேட்டேன்... 
சுதாரித்த அவர்....
மேலதிகாரியை கை காட்டினார்.....

அவரிடம் சென்று சுருக்கமாக விபரம் சொல்லி ....
அவரும் ஆவணங்களை கேட்ட போது...
இணையத்தில் இருந்து எடுக்கபட்ட நகலை காண்பித்து 
இதில் குறிப்பிட்டபடி ஆவணங்கள் இணைத்துள்ளேன் ... 
அப்பறம் என்னங்க அய்யா.... என்றதும் ....
 முப்பது நொடிகள் மெளனத்திற்கு பிறகு ....
 அவர் பேனாவால் ஏதோ கிறுக்கி
பழைய அலுவலரிடமே அனுப்பினார்...

அதை பார்த்ததும் அவரின் உபசரிப்புக்கு அளவே இல்லை...
காத்திருந்த அனைவரையும் தவிர்த்து ...
முழுக்க முழுக்க அனைத்து வேலைகளையும் முடித்து...
முறைபடி கட்ட வேண்டிய பணத்தையும் அவரே வாங்கி 
செலுத்தி ரசீதும் பெற்று தந்து .... அனுப்பி வைத்தார்...

ஒரே ஒரு வீட்டு வரி ரசீது நகலில் முடிக்க வேண்டிய
வேலையை ... அங்கிருந்த ( அலுவல் நடைமுறை தெரியாத) அதிகாரிகளால்
மக்கள் அல்லோகலபடுவதை நினைத்து பெருமூச்சிட்டபடியே....
உதவிய உள்ளங்களுக்கு நன்றி சொல்லி கிளம்பினோம்....

அந்த ஆயுதங்கள்...
ஆம் ஆத்மி தொப்பியும் ...
சட்டையில் குத்தும் AAP பேட்சும்....










Tuesday, February 17, 2015

கேட்டால் கிடைக்கும்

தலைநகர் டில்லியில்....
5.2.2015....
டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ...
ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில்
சாப்பிட சென்றேன் நண்பருடன்....
அது ஒரு சுய சேவை உணவகம்...
பணம் தந்து பில் போட்டு பின் உணவை வாங்கி
ஓரமா நின்னு சாப்பிடனும்ங்கறது அந்த விடுதியின் விதி....


மொழிபுரியாமல் .... ஏதோ ஏதோ பேசி....
ஏதோ வாயில் நுழையாத அய்யட்டங்கள்
ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு ....
தண்ணீர் கேட்டேன்...
வந்ததே வினை....

அங்கிருந்த அழகு மயில் வடமொழியில் சிரித்துக்கொண்டே...
கல்லா பொட்டியை கைகாட்டி ஏதோ கதைத்தது.....

கல்லா பொட்டியை கவனித்து கொண்டிருந்த ...
கல்லூரி மாணவன் போலிருந்த ஒருவன்..
...
என்னிடம் வா .... பணம் கொடு ... ரசீது தருகிறேன்...
அப்பறம் போய் ரசீதை கொடுத்து ....
தண்ணீர் வாங்கி குடி...
அது வரைக்கும் விக்கல் எடுக்கட்டும் ... என்று
அவன் மொழியில்  அவன் சொல்வது எனக்கு புரிந்தது....

என்னடா இது சோதனை...
தமிழில் பேசினாலே தொண்டை வரண்டு போகுமளவிற்கு...
கத்தி பின் தண்ணி வாங்கி குடிக்கனும்...
இதென்னடா வம்பா போச்சே....

சும்மாவே ......
நாமொன்னு சொல்ல அவங்க ஒன்னு புரிஞ்சுக்கறாங்க....
இதுல எங்க போய் சண்டை போட்டு தண்ணீர் வாங்கறதுன்னு
நினைச்சாலும்.... முடிந்தளவு...
காசு கொடுத்து தண்ணீர் வாங்குவதில்லை என்ற
கொள்கை பிடிப்பை கைவிட மனதில்லாமல்....

“மேம்...
யூ நவ் சுப்ரீம் கோர்ட் ஆர்டர் இன் நைண்டீன் நைண்ட்டீ எய்ட்...
எனி  ரெஸ்டாரண்ட், ஹோட்டல்ஸ் ஆர் புட் கோர்ட்
கம்பள்சரி  பிரி டிரிங்கிங் வாட்டர் சர்வீஸ்” .... என
எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அடிச்சு விட்டேன்....

சண்டை போடும் விதத்தில் கோபமாக நான் பேசியும்
முன்பை விட அழகாக சிரித்து கொண்டே அந்த பைங்கிளி
பைசா கட்டிட்டு வா ... பானி தருகிறேன் என
பழைய பல்லவியே வாசித்தது ....

“மேம் யூ அண்டர் ஸ்டேண்டிங் மை பிராப்ளம்” என கேட்டதும் தான்
புரிந்தது  எனக்கெப்படி தமிழ் மட்டும் தெரியுமோ.... அது போல
அதற்கு ஹிந்தி மட்டுமே தெரியும் போல...

தூரத்தில் இருந்து கவனித்து கொண்டிருந்த...
 கல்லா பெட்டி கதாநாயகன்...
ஓடி வந்து அந்த குளிர் நேரத்திலும்....
குளு குளுன்னு புது தண்ணீ பாட்டில் கொடுத்து புன்னகைத்தான்...
நன்றி சொல்லி தாகம் தணித்தோம்....

போராடி குடித்த தண்ணீர்....
மனதிற்கினிதாக ”சிறுவானி” தண்ணீரை விட
அருமையாக இருந்தது ....

அப்போது தான் புரிந்தது...
போராடி கிடைக்கும் தண்ணீரின் சுவை....

ஆகவே தான் சொல்கிறோம் ....
கேளுங்கள் கொடுக்கப்படும்....

Sunday, January 25, 2015

அரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..

நேற்று மாலை
அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில்
திருமணம் நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுக்க
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள
அலுவலகத்திற்கு சென்றேன்...

அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்பு...
.திருமணகட்டணம் ரூ.1000 கேட்டார் ...
கொழு பொம்மை போல் அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர்.

சில நாட்களுக்கு முன்பு சிவன்மலை கோவிலில்
நடந்த உறவினர் திருமணத்திற்கே
திருமண கட்டணம் ரூ.250 தான் கொடுத்திருந்தது
நினைவிற்கு வர.... சிவன்மலையில் நடந்த கதையை படிக்க...

நான் திருமணகட்டணம் குறைவாகத்தானே இருந்தது எனக்கேட்க..
அப்படியெல்லாம் இல்லை ரூ 1000 கட்டினால் கட்டுங்கள்
இல்லைனா நடையை கட்டுங்கள்” என்றார்

என்னுடைய இயல்புக்கு மாறாக சாந்தமாக....
இவர்கள் வசதியில்லாதவர்கள்....
ஏழைகளுக்கென்று கட்டணம் குறைவாக ஏதும் உள்ளதா..
எனக்கேட்டேன்...

1000 ரூபா கூட கட்ட முடியாதவங்க
கல்யாணம் பண்ணி எப்படி குடும்பம் நடத்துவாங்க ...
ஒரு பொண்ணை வச்சு எப்படி காப்பாத்துவாங்க......னு கேட்க...
என்னுள் இருந்த சாந்த மூர்த்தி  ருத்திர மூர்த்தியானார் .....

”ஒரு பொண்ணை வச்சு குடும்பம் நடத்த.....
1000 ரூபா தேவையில்லை.........(............)
ஆம்பளையா இருந்தா போதும்”
ஆனா உங்களை மாதரி பொண்ணை கட்டுன
தினம் 10000  சம்பாரிச்சாலும் பத்தாது’னு சொல்ல...
சிவப்பாக இருந்த அவரது முகம் மேலும் சிவந்தது....

அவருக்கு ஆதரவா பக்தி பழம் போலிருந்த இன்னொரு ஊழியர்
... உங்களுக்கு விருப்பமிருந்தா பணத்தை கட்டுங்க...இல்லைனா
எங்கோ போய் திருமணத்தை நடத்துங்கள்....”
“எங்கள் கோவிலுக்கு எதற்கு வருகிறீர்கள்....
நாங்களா வரச்சொன்னோம்” எனச்சொல்ல....
..
உன் அப்பன்.பாட்டன் வீட்டு...சொத்தா இந்த கோயில்....
பக்தர்கள் போடும் காணிக்கை காசில் சம்பளம் வாங்கி
வயிறு வளர்க்கும் உங்களுக்கு இவ்வளவு திமிரென்றால்
உங்களுக்கு மட்டுமல்லாமல் .....
வாசலில் இருப்பவர்களுக்கும் சேர்த்து
பிச்சை போடும் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்” என்று சொல்லி
பெரிய ருத்தர தாண்டவமே ஆடிவிட்டு.......

நேராக அறநிலையத்துறை உதவி ஆணையரை
சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றேன்...

அந்த அலுவலக உதவியாளர்களிடம் பிரச்சனையை சொன்னதும்
உதவி ஆணையாளர் தேக்கடி முகாமுக்கு சென்றிருப்பதாகவும்
அடுத்த வாரம் வந்து புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர்...

அடுத்த வாரம் வரை ஆறப்போட மனம் இடம் தராததால்
இருக்கவே இருக்கு நம்ம முதல்வர் தனிப்பிரிவு என ...
பைசா செலவில்லாமல் புகாரை தட்டி விட்டாச்சு....
பார்ப்போம் என்ன நடக்குமென்று....






Monday, December 1, 2014

மறை நீர் (Virtual water)

மறை நீர் (Virtual water)
பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?
மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.
ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.
புத்திசாலி நாடுகள்!
நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.
இது இந்திய நிலவரம்!
முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.
மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்
வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.
சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.
ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.
பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.
தண்ணீருக்கு எங்கு கணக்கு?
ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.
இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.
மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.
- The Change

Friday, June 13, 2014

சரவணனின் ஆட்டோகிரேப்......

மைதிலி என்னை காதலி என்று 
விவரம் இல்லா வயதில் விளையாடி திரிந்தவளோ 
இன்று விண்ணை தொடும் மாளிகையில் 
சிங்கார சிங்கப்பூரில் வாழ்கிறாள் ...

தனலட்சுமி போல தரணியில் இவளுடன் வாழலாம் என
மனகோட்டையில் மண் வீடுகட்டி வளர்ந்தவளோ
தலைநகர் சென்னைக்கு வாக்கபட்டு செழுமையாக வாழ்கிறாள்...

எண்ணும் எழுத்தும் கண்ணனென தகும் என 
கனிவுடன் கற்று கொடுத்து அக்கறையாக
அன்பு செழுத்திய கெளரியோ சாப்ட்வேர் இன்சினியர் ஆகி
ஐதாராபாத்தில் அவள் கணவனோடு காலந்தள்ளுகிறாள்...

கட்டிக்கட்டு புள்ளகுட்டி பெத்துக்கிட்டு வாழலாமுன்ன சுதாவை
பட்டிக்காட்டு மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்து
கொசுவம் கட்டிகிட்டு ஆட்டுகுட்டி மேச்சுகிட்டு பொலப்பை
ஓட்டிகிட்டு இருக்கிறாள்......

பள்ளி விட்டதும் பறந்து வந்து பார்த்தால்தான்
பதைபதைக்கும் மனசு பண்படுதுன்னு சொன்ன
சாந்தியோ சகலமும் மறந்து கேண்டீன்காரனை கட்டி
கேட்பாரின்றி சாந்தியிழந்து தாய் வீட்டில்....

பேரிட்சை பழம் போல பெரிய உதட்டுக்காரி
சாவகாசமாய் சிறைபடுத்திய சந்தியா...
கொங்கு மண்ணில் கோலாகலமாக வாழ்கிறாள்

இன்னும் இன்னும்.....
வசதியை மட்டுமே பார்த்த வசந்தி,
தேடி வந்த தேவதை தேவி,
அருமையான காதலி அருணா,
அன்பான அமுதா,
சொல்லி கொடுத்த வாசவி,
மறக்க முடியாத சங்கீதா...
வியாக்கியனமான வித்யா....
ஜெயா..
உங்களின் ஞாபகங்கள் என்றும் என்றென்றும் பசுமை மாறாமல்
நீக்கமற நிறைந்திருக்கும் என் நெஞ்சத்தில்....
அன்புடன்....சரவணபிரகாஷ்...

பிறந்தநாள் வாழ்த்து

சண்டாளி , சதிகாரி , சர்வாதிகாரி , ஹிட்லர், முசோலினி , பேய் , பிசாசு பூதகி என்று இந்திரா காந்தியை புகழ்ந்தும்

அண்டங் காக்கா , காண்டாமிருகத் தோலர் , எருமைத் தோலர் , மரமேறி , பனை ஏறி , கட்டபீடி என காமராஜரை ஒருமையில் வசை பாடியும்

நடிகன் , காத்தாடி , கிழவன் , மலையாளி , அட்டைக் கத்தி , கோமாளி , ஊமையன் , அலி என்றெல்லாம் மக்கள் திலகத்தை பெருமை படுத்தியும் 

காவிரி தென்பெண்ணை பாலாறு , மூப்பனார் மூளையில்கோளாறு என்று புகழ்ந்தும்

ஐஸ்ப்ரூட் சம்பத் , வாழப்பாடி ஒரு வழிப்போக்கன் , செவிடன் ஜீவானந்தன் , நொண்டி பா. ராமமூர்த்தி , கக்கன் என்ன கொக்கா ? என்றெல்லாம் பேசியும்

குல்லுக பட்டர் ராஜகோபாலாச்சாரி , கைபர் கணவாய் வழியே வந்த வந்தேறி வெங்கட்ராமன் , குரங்கன் பக்தவத்சலம் , துரோகி பண்ருட்டி ராமச்சந்திரன் , ஈனப் பிறவி இரா. செழியன் , சீமான் வீட்டு கன்றுக் குட்டி சின்னப் பைய்யன் ஈ எறும்பு , கொசு , தத்துப் போன ஓசி பணக்காரன் பா சிதம்பரம் .

பண்டாரம் , பரதேசி , கமண்டலம் , காவி உடை , ஆக்டோபஸ் ஜந்துக்கள் , கூனை நிமிர்த்த முடியாத ஒட்டகங்கலான வாஜ்பாய்கள் அத்வானிகள் , இல கணேசன்கள்

ராஜீவ் போல நான் ஒன்றும் வெளிநாட்டுக்காரியை கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்று சோனியாவையும்

காந்தாரி , கவுதாரி , சூர்பனகை , காதறுந்த காலி , மூக்கறுந்த மூளி பால்கனி பாவை , தனியே பேசலாம் வா உனக்கு சேதாரம் எதுவும் ஏற்படாது , என்றெல்லாம் இன்றைய முதல்வரை கவி பாடியும்

துரு பிடித்த வாள் , குளத்தை விட்டு ஓடிய மீன் , கலிங்கப் பட்டி களிமண் என்று வைகோவை கொண்டாடியும்

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பல புதிய புனைப்பெயர்களை வழங்கிய
தமிழ்த்தாயின் தலைமகன் என சொல்லி கொள்ளும்
மூவுலகத் தமிழர்களின் பாசத்தலைவனுக்கு
“பிறந்தநாள் வாழ்த்துகள்”.......

Saturday, March 15, 2014

கேட்டால் கிடைக்கும்

13.11.2013
என் கொழுந்தியாவின் திருமணம்... 
கொங்கு நாட்டின் புகழ்பெற்ற சிவன்மலை..கோயிலில்....

சுற்றத்தாரிடம் குசலம் விசாரித்து கொண்டிருந்த என்னை...
சாட்சி கையெழுத்து போட கூப்பிட்டார்கள்... 
(அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நான்)
....
அலுவலகத்தில் தேவையான ஆவணங்களை
சமர்பிக்கும் போதே திருமண கட்டணம்
மொத்தம் ரூ.1500/.... என சொல்லியிருந்தார்களாம்... 
கடைசியாக கையெழுத்து போட்ட என்னிடம்
ரூ 1500 கொடுத்து கொடுக்க சொன்னார்கள்....
(எந்த ரூபத்திலும் சனி தேடிவரும் போல...)

திருமண கட்டண ரசீது -ரூ.250
கோவில் உபயவரவு ரூ.500
கேமரா கட்டணம் ரூ.100 என மூன்று ரசீது தந்தார்கள்....
ரூ.1500 பணம் கொடுத்துட்டு ரசீதுகளை வாங்கி பார்த்த நான்
அருகிலிருந்த ... என் மனைவியின் தம்பியிடம் .......
”மீதி ரூ.650... தருவாங்க .. ஒழுங்கா வாங்கிட்டு வா”னு சத்தமாக
சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் வந்துட்டேன்.....
மறு பேச்சு ஏதுமில்லாமல் ரூ 650 கொடுத்தனுப்பினார்கள்....
கோவில் ஊழியர்கள் .... ஆகவே தான் சொல்கிறேன்....
#கேளுங்கள்_கேட்டால்_கிடைக்கும்
 

அன்பு மகளோ ....

”அப்பா...”....
“சொல்லுப்பா....’....
”நான் பெருசாகி டீச்சர் ஆகிடறேன்பா...”.........
...
சொன்னது.... முதலாம் வகுப்பில்
வகுப்பு தலைவியா இருக்கும்
என் மகள் வானதி.....
...
”ஏம்பா...டீச்சர் வேலை தான் உனக்கு பிடிக்குமா.....”
”இல்லைப்பா....”..
நீங்க தானே அடிக்கடி பணம் இல்லைங்கறீங்க.....அதான்.....
...
... ஓ.... டாக்டருக்கு படிக்க அதிக பணம் செலாவகும்...
அதனால டீச்சர் ஆகறேன்னு சொல்றயா.....
....
”அதில்லைப்பா...”....
...அப்பறம்.....
...
...”டீச்சர் தானே அடிக்கடி
”டேர்ம் பீஸ்” கொண்டு வா....
டைக்கு பெல்ட்டுக்கு பணம் கட்டு.....
”டியூசன் பீஸ்” கொண்டு வா....
சாட்டர் டே யூனிபார்ம்... ..ஸ்போர்ஸ் டிரஸ்
வாஙக பணம் கொண்டு வா...
தீபாவளி போனஸ் கொண்டு வா....
(அதுக்கு பிரச்சனை பண்ணி நாங்க தரலை)...
இப்படி அடிக்கடி பணம் வாங்கறாங்க....
நிறைய்ய பணம் வசூல் பண்ணி வச்சுருக்காங்க.....
நான் டீச்சர் ஆனா இதே மாதரி எல்லோர்த்துகிட்டையும்
வசூல் பண்ணலாம் இல்லையா.....”....

அனுபவம்

அவசர தேவை...
ஒரு செம்பு சொம்பும்.... போன்சாய் ஆலமரமும்...
... 
வெள்ளிகிழமை...
சமூக நலம் கருதும் அமைப்பொன்றில் ஈகோ பிரச்சனை...
நீங்க வந்து தான் தீத்து வைக்கனுமுன்னு சொல்லிட்டாங்க...
நம்மால முடிஞ்சது போய் குட்டையை குழப்பிட்டு வந்தாச்சு...
...
சனிக்கிழமை...
அண்ணன் தம்பி குடும்ப பிரச்சனை ...
நீங்க வந்தா தான் சுமூகமா முடிப்பீங்க ... பிளீஸ்...னு போன்...
போய் அவங்க அவங்க பிரச்சனைகளை கேட்டதுமே ...
நமக்கு பிபி...ஹை...லோ ...எல்லாமுமே வந்துடும் போல...
எப்படி எப்படியோ பேசி.... கோர்ட்டுக்கு போக வச்சாச்சு.....
....
ஞாயித்துகிழமை..
பல ஆண்டுகளாக தீராத சமுதாய சங்க பிரச்சனை...
அறகட்டளை உறுப்பினர் என்ற முறையில் அழைப்பு....
திடீர் .... ஞானோதயமாக நான் சொன்ன செயல்திட்டங்களை
அமுல்படுத்த முடிவெடுத்து கமிட்டியும் அமைத்து....
செயலாக்கும் பொறுப்பை என் தலையில் கட்டி விட்டார்கள்...
....
திங்கட்கிழமை...
கணவன் மனைவி சண்டை...
பிரச்சனைகளை கேட்க ஒருவன் தயார் என்றதுமே..
அருவி போல கொட்டுகிறார்கள் இரு தரப்புமே...
பல பல சந்தேகங்களை கேட்கிற சாக்கில் அவர்கள் மேல்
அக்கறை இருப்பதாக காட்டியதாலே அவர்கள் பிரச்சனை
முடிந்ததாக எண்ணி சந்தோசமாக வழியனுப்பி வைத்தார்கள்...
....
செவ்வாய்கிழமை....
..
...
...
...
....
....
...
....
...
..
.
.
காலை 7 மணிக்கு போன்.
...
என்னது...
..
அப்படியா...
...
இதோ இப்போ வந்துடறேன்...
...
.
.
.
.
திரும்பி பார்த்தா வூட்டம்மா.....
வாசல் தொளிச்சு கோலம் போட்டுட்டு வந்தாங்க
....
போங்கடா நீங்களும் உங்க பஞ்சாயத்தும் ....
ஒரு டீக்கும்... பண்ணுக்கும் .... மீறி போனா சனிக்கிழமை
அண்ணன் தம்பினால அதிர்ஷ்டமா கிடைச்ச பிரியாணிக்கும்
பஞ்சாயத்து பண்ணிட்டு இருந்தா எங்க வூட்டுல ...
”ஏனுங்க உங்க கட்சி சின்னம் இதுதானேன்னு .....
வெளுக்குமாத்த தூக்கிடுவாங்க .......
அப்பறம் நான் பஞ்சாயத்தை கூட்டனும்.....

Thursday, December 12, 2013

தகவல் உரிமை சட்டம்

ஒரு இந்து கோயிலை அறநிலையத்துறை
கையகபடுத்தினால் அதன் அதிகாரிகள் 1951ம் ஆண்டு 
சட்டபிரிவு 25 மற்றும் பிரிவு 29ன் கீழ் 
ஒரு சொத்து பதிவேடு உருவாக்க வேண்டும்...

அதில் கோயிலுக்கு சொந்தமான நகைகள், 
அசையும் சொத்துக்களும்,நிலங்கள்,மரங்கள் உள்ளிட்ட 
அசையா சொத்துக்களும், கோயிலின் மரபுகள்,விழாக்கள்,
சன்னதிகள்,சிலை விபரங்கள், பூஜை முறைகள்,
கட்டளை விபரங்கள், அறங்காவலர்கள் குறித்த விபரங்கள்
அனைத்தும் இடம்பெற்று பராமரிக்க வேண்டும்....
இது அறநிலையத்துறையால் நியமிக்கபடும்
கோயில் நிர்வாகிகளின் அடிப்படை கடமை ஆகும்...

இந்த பதிவேடுகள் ஒழுங்காக பேணபட்டு வருகிறதா என
கண்டறிய ”தகவல் உரிமை சட்டபடி” தமிழகத்தின்
25 முக்கிய கோயில்களில் கேள்விகள் கேட்டதற்கு...
சில கோவில்கள் பதிலே தரவில்லை...

தர மறுத்து வித்தியாசமாக வந்த பதில்களில் சில...

பழனி - ரிஜிஸ்தர் மிகவும் நைந்த நிலைமையில் உள்ளது
வடபழனி - தேடி பார்த்தோம் ரிஜிஸ்தரை காணவில்லை
திருச்செந்தூர் - ரிஜிஸ்தர் மிக பெரியது படி எடுக்க முடியாது.

ராமேஸ்வரம் - அதிகாரிக்கு வேலை பளு அதிகம் ஆகவே
தரமுடியாது. பதில் தந்தால் அலுவலகமே ஸ்தம்பித்து போகுமாம்...
திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில் - ரிஜிஸ்தர் நகல்
கொடுத்தால் அதை வாங்கியவர் கிரிமினல் நடவடிக்கை
செயல்கள் செய்யகூடிய வாய்ப்பிருப்பதால் தர இயலாது.

கிட்டதட்ட எல்லா கோவில்களும் ஒன்று போல பிரிவு 30,31ன்
கீழ் செய்ய வேண்டிய ஆண்டு விபரங்களின் சேர்க்கை,
பத்து வருடங்களின் தொகுப்பு ஆகியன நடைபெறவில்லை
என்று பதில் அளித்துள்ளனர்...
இவையெல்லாம் மிகப்பெரிய கிரிமினல் குற்றங்களாகும்...

SaravanaPrakash Tirupur
http://www.mediafire.com/?j2fivj36ms6fpk6

Friday, November 29, 2013

துரோகிகளை தண்டிக்க....

உனக்கு துரோகமிளைத்தவனை 
எவ்வண்ணமெல்லாம் நீ தண்டிக்கலாம் ?

அகால இரவொன்றில் அவன் அறைக்குள் 
பெட்ரோலூற்றி நெருப்பு வைக்கலாம்,

நல்லவிதமாய் உறவாடி நயவஞ்சக காய்களை 
நகர்த்தி வாழ்வின் பெரும்பாதாளத்தில் கவிழ்கலாம்,

ஊர்பூராவும் அவனை பற்றி அவதூறு பரப்பலாம்,
பார்க்கிற இடத்திலெல்லாம்
பளாரென அவனை அறைய சீறிபாயலாம்,

விடுதியொன்றில் எதேச்சையாய் சந்திக்க
நேர்கையில் முகத்தில் உமிழ்ந்து அவமதிக்கலாம்,

கூலிப்படை கொண்டு குரூரமாய் தாக்கி ஊனப்படுத்தலாம்,

அவன் குடும்பத்தில் உட்பூசல் உண்டாக்கி நிலை குலைக்கலாம்.

காலம் முழுக்க அவன் செய்ததை
எண்ணி எண்ணி சபித்து கொண்டே இருக்கலாம்,

ஒவ்வொரு பொழுதும் அவன் நிம்மதியை அழிக்க‌
ஒரு பொல்லாததை செய்தவாறே இருக்கலாம்....

என்றாலும் எவ்வளவு பழிவாங்கினாலும்
உன் மனரணமும் அழுத்தமும் சினமும் பழியும்
குறையப்‌ போவதே இல்லை....

ஆதலால் நீஅவனை மன்னித்துவிடலாம்...

படித்ததில் பிடித்தது...

கேட்டால் கிடைக்கும்


இன்று (13.11.2013) என் கொழுந்தியாவின் திருமணம்... 
கொங்கு நாட்டின் புகழ்பெற்ற சிவன்மலை..கோயிலில்....

சுற்றத்தாரிடம் குசலம் விசாரித்து கொண்டிருந்த என்னை...
சாட்சி கையெழுத்து போட கூப்பிட்டார்கள்... 
(அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நான்)
....
அலுவலகத்தில் தேவையான ஆவணங்களை
சமர்பிக்கும் போதே திருமண கட்டணம்
மொத்தம் ரூ.1500/.... என சொல்லியிருந்தார்களாம்... 
கடைசியாக கையெழுத்து போட்ட என்னிடம்
ரூ 1500 கொடுத்து கொடுக்க சொன்னார்கள்....
(எந்த ரூபத்திலும் சனி தேடிவரும் போல...)

திருமண கட்டண ரசீது -ரூ.250
கோவில் உபயவரவு ரூ.500
கேமரா கட்டணம் ரூ.100 என மூன்று ரசீது தந்தார்கள்....
ரூ.1500 பணம் கொடுத்துட்டு ரசீதுகளை வாங்கி பார்த்த நான்
அருகிலிருந்த ... என் மனைவியின் தம்பியிடம் .......
”மீதி ரூ.650... தருவாங்க .. ஒழுங்கா வாங்கிட்டு வா”னு சத்தமாக
சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் வந்துட்டேன்.....
மறு பேச்சு ஏதுமில்லாமல் ரூ 650 கொடுத்தனுப்பினார்கள்....
கோவில் ஊழியர்கள் .... ஆகவே தான் சொல்கிறேன்....
கேட்டால் கிடைக்கும்