Thursday, December 12, 2013

தகவல் உரிமை சட்டம்

ஒரு இந்து கோயிலை அறநிலையத்துறை
கையகபடுத்தினால் அதன் அதிகாரிகள் 1951ம் ஆண்டு 
சட்டபிரிவு 25 மற்றும் பிரிவு 29ன் கீழ் 
ஒரு சொத்து பதிவேடு உருவாக்க வேண்டும்...

அதில் கோயிலுக்கு சொந்தமான நகைகள், 
அசையும் சொத்துக்களும்,நிலங்கள்,மரங்கள் உள்ளிட்ட 
அசையா சொத்துக்களும், கோயிலின் மரபுகள்,விழாக்கள்,
சன்னதிகள்,சிலை விபரங்கள், பூஜை முறைகள்,
கட்டளை விபரங்கள், அறங்காவலர்கள் குறித்த விபரங்கள்
அனைத்தும் இடம்பெற்று பராமரிக்க வேண்டும்....
இது அறநிலையத்துறையால் நியமிக்கபடும்
கோயில் நிர்வாகிகளின் அடிப்படை கடமை ஆகும்...

இந்த பதிவேடுகள் ஒழுங்காக பேணபட்டு வருகிறதா என
கண்டறிய ”தகவல் உரிமை சட்டபடி” தமிழகத்தின்
25 முக்கிய கோயில்களில் கேள்விகள் கேட்டதற்கு...
சில கோவில்கள் பதிலே தரவில்லை...

தர மறுத்து வித்தியாசமாக வந்த பதில்களில் சில...

பழனி - ரிஜிஸ்தர் மிகவும் நைந்த நிலைமையில் உள்ளது
வடபழனி - தேடி பார்த்தோம் ரிஜிஸ்தரை காணவில்லை
திருச்செந்தூர் - ரிஜிஸ்தர் மிக பெரியது படி எடுக்க முடியாது.

ராமேஸ்வரம் - அதிகாரிக்கு வேலை பளு அதிகம் ஆகவே
தரமுடியாது. பதில் தந்தால் அலுவலகமே ஸ்தம்பித்து போகுமாம்...
திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில் - ரிஜிஸ்தர் நகல்
கொடுத்தால் அதை வாங்கியவர் கிரிமினல் நடவடிக்கை
செயல்கள் செய்யகூடிய வாய்ப்பிருப்பதால் தர இயலாது.

கிட்டதட்ட எல்லா கோவில்களும் ஒன்று போல பிரிவு 30,31ன்
கீழ் செய்ய வேண்டிய ஆண்டு விபரங்களின் சேர்க்கை,
பத்து வருடங்களின் தொகுப்பு ஆகியன நடைபெறவில்லை
என்று பதில் அளித்துள்ளனர்...
இவையெல்லாம் மிகப்பெரிய கிரிமினல் குற்றங்களாகும்...

SaravanaPrakash Tirupur
http://www.mediafire.com/?j2fivj36ms6fpk6

No comments: