Sunday, May 10, 2015

கல்வி பெறும் உரிமை.. கேட்டால் கிடைக்கும்

கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றி ...
எடுத்துக்கூறி ஏழை பெண் ஒருவரை
அவர் வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு...
RTE Act படி இவர்களுக்கு ஒரு விண்ணப்பம் வழங்கவும் என
கடிதம் கொடுத்தனுப்பினேன்...

யார் என்ன ஏது என விசாரித்து விட்டு...
என் கைப்பேசி எண்ணை வாங்கி அழைத்தார்...
அந்த தனியார் பள்ளி முதல்வர்..
எனக்கு வேலை கொஞ்சம் இருந்ததாலும் ...
புதிய எண்ணாக இருந்ததாலும்  கைப்பேசியை எடுக்கவில்லை ..

பள்ளி பெயரை குறிப்பிட்டு...
தான் பள்ளி முதல்வர் எனவும்
தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனவும் குறுஞ்செய்தி அனுப்பினார்...

தொடர்பு கொண்டேன்...
தங்கள் பள்ளி வளரும் பள்ளி எனவும்...
இது போன்ற சட்டங்களை பின்பற்றினால் .. நாங்கள்
பள்ளி நடத்துவது கடினம் எனவும் சொல்லி..
மேற்படி குழந்தைக்கு குறைந்த கட்டணமே
வசூலித்து கொள்கிறோம் .. என்றும் சொல்ல....
எனக்கு ஜிவ்வென்று ஏறியது.....

விண்ணப்பம் வழங்க முடியுமா முடியாதா...
முடியாதென்றால் சொல்லிவிடுங்கள் ..
நான் பார்த்துக்கொள்கிறேன்... என நான் சொல்ல...

உடனே அவர்
கட்டாய கல்வி சட்டத்தை அவர்கள் தாங்கி பிடிப்பது போல..
இந்த சட்டம் எஸ்சி..எஸ்டி-யினருக்கு மட்டுமே எனச்சொல்ல...
எழுத்துபூர்வமாக கொடுங்கள்  என நான் சொல்ல...
அந்நியன் போல மாறிவிட்டார்... அவர்..

நீங்கள் அனுப்பியவரை ..
கட்டாய கல்வி சட்டபடியே நாங்கள் சேர்த்துக்கொள்கிறோம்..
உடனே அவர்களை அனைத்து சான்றிதழ்களையும்
கொண்டு வந்து சேர சொல்லுங்கள் .. எனச்சொல்லி...
உங்களை நான் அவசியம் சந்திக்கனும் ...
பிரியா இருக்கும் போது வாங்கனு சொல்லி ...
வாயெல்லாம் பல்லாக அவர் சிரித்த சிரிப்பு ...
போனிலேயே எனக்கு தெரிந்தது...

கேட்டால் கிடைக்கும்





1 comment:

Anonymous said...

Well done Sir!

உங்களின் வெற்றி தொடற என்னுடைய வாழ்த்துக்கள்!