Tuesday, February 17, 2015

கேட்டால் கிடைக்கும்

தலைநகர் டில்லியில்....
5.2.2015....
டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ...
ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில்
சாப்பிட சென்றேன் நண்பருடன்....
அது ஒரு சுய சேவை உணவகம்...
பணம் தந்து பில் போட்டு பின் உணவை வாங்கி
ஓரமா நின்னு சாப்பிடனும்ங்கறது அந்த விடுதியின் விதி....


மொழிபுரியாமல் .... ஏதோ ஏதோ பேசி....
ஏதோ வாயில் நுழையாத அய்யட்டங்கள்
ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு ....
தண்ணீர் கேட்டேன்...
வந்ததே வினை....

அங்கிருந்த அழகு மயில் வடமொழியில் சிரித்துக்கொண்டே...
கல்லா பொட்டியை கைகாட்டி ஏதோ கதைத்தது.....

கல்லா பொட்டியை கவனித்து கொண்டிருந்த ...
கல்லூரி மாணவன் போலிருந்த ஒருவன்..
...
என்னிடம் வா .... பணம் கொடு ... ரசீது தருகிறேன்...
அப்பறம் போய் ரசீதை கொடுத்து ....
தண்ணீர் வாங்கி குடி...
அது வரைக்கும் விக்கல் எடுக்கட்டும் ... என்று
அவன் மொழியில்  அவன் சொல்வது எனக்கு புரிந்தது....

என்னடா இது சோதனை...
தமிழில் பேசினாலே தொண்டை வரண்டு போகுமளவிற்கு...
கத்தி பின் தண்ணி வாங்கி குடிக்கனும்...
இதென்னடா வம்பா போச்சே....

சும்மாவே ......
நாமொன்னு சொல்ல அவங்க ஒன்னு புரிஞ்சுக்கறாங்க....
இதுல எங்க போய் சண்டை போட்டு தண்ணீர் வாங்கறதுன்னு
நினைச்சாலும்.... முடிந்தளவு...
காசு கொடுத்து தண்ணீர் வாங்குவதில்லை என்ற
கொள்கை பிடிப்பை கைவிட மனதில்லாமல்....

“மேம்...
யூ நவ் சுப்ரீம் கோர்ட் ஆர்டர் இன் நைண்டீன் நைண்ட்டீ எய்ட்...
எனி  ரெஸ்டாரண்ட், ஹோட்டல்ஸ் ஆர் புட் கோர்ட்
கம்பள்சரி  பிரி டிரிங்கிங் வாட்டர் சர்வீஸ்” .... என
எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அடிச்சு விட்டேன்....

சண்டை போடும் விதத்தில் கோபமாக நான் பேசியும்
முன்பை விட அழகாக சிரித்து கொண்டே அந்த பைங்கிளி
பைசா கட்டிட்டு வா ... பானி தருகிறேன் என
பழைய பல்லவியே வாசித்தது ....

“மேம் யூ அண்டர் ஸ்டேண்டிங் மை பிராப்ளம்” என கேட்டதும் தான்
புரிந்தது  எனக்கெப்படி தமிழ் மட்டும் தெரியுமோ.... அது போல
அதற்கு ஹிந்தி மட்டுமே தெரியும் போல...

தூரத்தில் இருந்து கவனித்து கொண்டிருந்த...
 கல்லா பெட்டி கதாநாயகன்...
ஓடி வந்து அந்த குளிர் நேரத்திலும்....
குளு குளுன்னு புது தண்ணீ பாட்டில் கொடுத்து புன்னகைத்தான்...
நன்றி சொல்லி தாகம் தணித்தோம்....

போராடி குடித்த தண்ணீர்....
மனதிற்கினிதாக ”சிறுவானி” தண்ணீரை விட
அருமையாக இருந்தது ....

அப்போது தான் புரிந்தது...
போராடி கிடைக்கும் தண்ணீரின் சுவை....

ஆகவே தான் சொல்கிறோம் ....
கேளுங்கள் கொடுக்கப்படும்....

Sunday, January 25, 2015

அரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..

நேற்று மாலை
அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில்
திருமணம் நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுக்க
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள
அலுவலகத்திற்கு சென்றேன்...

அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்பு...
.திருமணகட்டணம் ரூ.1000 கேட்டார் ...
கொழு பொம்மை போல் அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர்.

சில நாட்களுக்கு முன்பு சிவன்மலை கோவிலில்
நடந்த உறவினர் திருமணத்திற்கே
திருமண கட்டணம் ரூ.250 தான் கொடுத்திருந்தது
நினைவிற்கு வர.... சிவன்மலையில் நடந்த கதையை படிக்க...

நான் திருமணகட்டணம் குறைவாகத்தானே இருந்தது எனக்கேட்க..
அப்படியெல்லாம் இல்லை ரூ 1000 கட்டினால் கட்டுங்கள்
இல்லைனா நடையை கட்டுங்கள்” என்றார்

என்னுடைய இயல்புக்கு மாறாக சாந்தமாக....
இவர்கள் வசதியில்லாதவர்கள்....
ஏழைகளுக்கென்று கட்டணம் குறைவாக ஏதும் உள்ளதா..
எனக்கேட்டேன்...

1000 ரூபா கூட கட்ட முடியாதவங்க
கல்யாணம் பண்ணி எப்படி குடும்பம் நடத்துவாங்க ...
ஒரு பொண்ணை வச்சு எப்படி காப்பாத்துவாங்க......னு கேட்க...
என்னுள் இருந்த சாந்த மூர்த்தி  ருத்திர மூர்த்தியானார் .....

”ஒரு பொண்ணை வச்சு குடும்பம் நடத்த.....
1000 ரூபா தேவையில்லை.........(............)
ஆம்பளையா இருந்தா போதும்”
ஆனா உங்களை மாதரி பொண்ணை கட்டுன
தினம் 10000  சம்பாரிச்சாலும் பத்தாது’னு சொல்ல...
சிவப்பாக இருந்த அவரது முகம் மேலும் சிவந்தது....

அவருக்கு ஆதரவா பக்தி பழம் போலிருந்த இன்னொரு ஊழியர்
... உங்களுக்கு விருப்பமிருந்தா பணத்தை கட்டுங்க...இல்லைனா
எங்கோ போய் திருமணத்தை நடத்துங்கள்....”
“எங்கள் கோவிலுக்கு எதற்கு வருகிறீர்கள்....
நாங்களா வரச்சொன்னோம்” எனச்சொல்ல....
..
உன் அப்பன்.பாட்டன் வீட்டு...சொத்தா இந்த கோயில்....
பக்தர்கள் போடும் காணிக்கை காசில் சம்பளம் வாங்கி
வயிறு வளர்க்கும் உங்களுக்கு இவ்வளவு திமிரென்றால்
உங்களுக்கு மட்டுமல்லாமல் .....
வாசலில் இருப்பவர்களுக்கும் சேர்த்து
பிச்சை போடும் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்” என்று சொல்லி
பெரிய ருத்தர தாண்டவமே ஆடிவிட்டு.......

நேராக அறநிலையத்துறை உதவி ஆணையரை
சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றேன்...

அந்த அலுவலக உதவியாளர்களிடம் பிரச்சனையை சொன்னதும்
உதவி ஆணையாளர் தேக்கடி முகாமுக்கு சென்றிருப்பதாகவும்
அடுத்த வாரம் வந்து புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர்...

அடுத்த வாரம் வரை ஆறப்போட மனம் இடம் தராததால்
இருக்கவே இருக்கு நம்ம முதல்வர் தனிப்பிரிவு என ...
பைசா செலவில்லாமல் புகாரை தட்டி விட்டாச்சு....
பார்ப்போம் என்ன நடக்குமென்று....






Monday, December 1, 2014

மறை நீர் (Virtual water)

மறை நீர் (Virtual water)
பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?
மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.
ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.
புத்திசாலி நாடுகள்!
நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.
இது இந்திய நிலவரம்!
முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.
மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்
வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.
சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.
ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.
பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.
தண்ணீருக்கு எங்கு கணக்கு?
ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.
இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.
மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.
- The Change

Friday, June 13, 2014

சரவணனின் ஆட்டோகிரேப்......

மைதிலி என்னை காதலி என்று 
விவரம் இல்லா வயதில் விளையாடி திரிந்தவளோ 
இன்று விண்ணை தொடும் மாளிகையில் 
சிங்கார சிங்கப்பூரில் வாழ்கிறாள் ...

தனலட்சுமி போல தரணியில் இவளுடன் வாழலாம் என
மனகோட்டையில் மண் வீடுகட்டி வளர்ந்தவளோ
தலைநகர் சென்னைக்கு வாக்கபட்டு செழுமையாக வாழ்கிறாள்...

எண்ணும் எழுத்தும் கண்ணனென தகும் என 
கனிவுடன் கற்று கொடுத்து அக்கறையாக
அன்பு செழுத்திய கெளரியோ சாப்ட்வேர் இன்சினியர் ஆகி
ஐதாராபாத்தில் அவள் கணவனோடு காலந்தள்ளுகிறாள்...

கட்டிக்கட்டு புள்ளகுட்டி பெத்துக்கிட்டு வாழலாமுன்ன சுதாவை
பட்டிக்காட்டு மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்து
கொசுவம் கட்டிகிட்டு ஆட்டுகுட்டி மேச்சுகிட்டு பொலப்பை
ஓட்டிகிட்டு இருக்கிறாள்......

பள்ளி விட்டதும் பறந்து வந்து பார்த்தால்தான்
பதைபதைக்கும் மனசு பண்படுதுன்னு சொன்ன
சாந்தியோ சகலமும் மறந்து கேண்டீன்காரனை கட்டி
கேட்பாரின்றி சாந்தியிழந்து தாய் வீட்டில்....

பேரிட்சை பழம் போல பெரிய உதட்டுக்காரி
சாவகாசமாய் சிறைபடுத்திய சந்தியா...
கொங்கு மண்ணில் கோலாகலமாக வாழ்கிறாள்

இன்னும் இன்னும்.....
வசதியை மட்டுமே பார்த்த வசந்தி,
தேடி வந்த தேவதை தேவி,
அருமையான காதலி அருணா,
அன்பான அமுதா,
சொல்லி கொடுத்த வாசவி,
மறக்க முடியாத சங்கீதா...
வியாக்கியனமான வித்யா....
ஜெயா..
உங்களின் ஞாபகங்கள் என்றும் என்றென்றும் பசுமை மாறாமல்
நீக்கமற நிறைந்திருக்கும் என் நெஞ்சத்தில்....
அன்புடன்....சரவணபிரகாஷ்...

பிறந்தநாள் வாழ்த்து

சண்டாளி , சதிகாரி , சர்வாதிகாரி , ஹிட்லர், முசோலினி , பேய் , பிசாசு பூதகி என்று இந்திரா காந்தியை புகழ்ந்தும்

அண்டங் காக்கா , காண்டாமிருகத் தோலர் , எருமைத் தோலர் , மரமேறி , பனை ஏறி , கட்டபீடி என காமராஜரை ஒருமையில் வசை பாடியும்

நடிகன் , காத்தாடி , கிழவன் , மலையாளி , அட்டைக் கத்தி , கோமாளி , ஊமையன் , அலி என்றெல்லாம் மக்கள் திலகத்தை பெருமை படுத்தியும் 

காவிரி தென்பெண்ணை பாலாறு , மூப்பனார் மூளையில்கோளாறு என்று புகழ்ந்தும்

ஐஸ்ப்ரூட் சம்பத் , வாழப்பாடி ஒரு வழிப்போக்கன் , செவிடன் ஜீவானந்தன் , நொண்டி பா. ராமமூர்த்தி , கக்கன் என்ன கொக்கா ? என்றெல்லாம் பேசியும்

குல்லுக பட்டர் ராஜகோபாலாச்சாரி , கைபர் கணவாய் வழியே வந்த வந்தேறி வெங்கட்ராமன் , குரங்கன் பக்தவத்சலம் , துரோகி பண்ருட்டி ராமச்சந்திரன் , ஈனப் பிறவி இரா. செழியன் , சீமான் வீட்டு கன்றுக் குட்டி சின்னப் பைய்யன் ஈ எறும்பு , கொசு , தத்துப் போன ஓசி பணக்காரன் பா சிதம்பரம் .

பண்டாரம் , பரதேசி , கமண்டலம் , காவி உடை , ஆக்டோபஸ் ஜந்துக்கள் , கூனை நிமிர்த்த முடியாத ஒட்டகங்கலான வாஜ்பாய்கள் அத்வானிகள் , இல கணேசன்கள்

ராஜீவ் போல நான் ஒன்றும் வெளிநாட்டுக்காரியை கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்று சோனியாவையும்

காந்தாரி , கவுதாரி , சூர்பனகை , காதறுந்த காலி , மூக்கறுந்த மூளி பால்கனி பாவை , தனியே பேசலாம் வா உனக்கு சேதாரம் எதுவும் ஏற்படாது , என்றெல்லாம் இன்றைய முதல்வரை கவி பாடியும்

துரு பிடித்த வாள் , குளத்தை விட்டு ஓடிய மீன் , கலிங்கப் பட்டி களிமண் என்று வைகோவை கொண்டாடியும்

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பல புதிய புனைப்பெயர்களை வழங்கிய
தமிழ்த்தாயின் தலைமகன் என சொல்லி கொள்ளும்
மூவுலகத் தமிழர்களின் பாசத்தலைவனுக்கு
“பிறந்தநாள் வாழ்த்துகள்”.......

Saturday, March 15, 2014

கேட்டால் கிடைக்கும்

13.11.2013
என் கொழுந்தியாவின் திருமணம்... 
கொங்கு நாட்டின் புகழ்பெற்ற சிவன்மலை..கோயிலில்....

சுற்றத்தாரிடம் குசலம் விசாரித்து கொண்டிருந்த என்னை...
சாட்சி கையெழுத்து போட கூப்பிட்டார்கள்... 
(அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நான்)
....
அலுவலகத்தில் தேவையான ஆவணங்களை
சமர்பிக்கும் போதே திருமண கட்டணம்
மொத்தம் ரூ.1500/.... என சொல்லியிருந்தார்களாம்... 
கடைசியாக கையெழுத்து போட்ட என்னிடம்
ரூ 1500 கொடுத்து கொடுக்க சொன்னார்கள்....
(எந்த ரூபத்திலும் சனி தேடிவரும் போல...)

திருமண கட்டண ரசீது -ரூ.250
கோவில் உபயவரவு ரூ.500
கேமரா கட்டணம் ரூ.100 என மூன்று ரசீது தந்தார்கள்....
ரூ.1500 பணம் கொடுத்துட்டு ரசீதுகளை வாங்கி பார்த்த நான்
அருகிலிருந்த ... என் மனைவியின் தம்பியிடம் .......
”மீதி ரூ.650... தருவாங்க .. ஒழுங்கா வாங்கிட்டு வா”னு சத்தமாக
சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் வந்துட்டேன்.....
மறு பேச்சு ஏதுமில்லாமல் ரூ 650 கொடுத்தனுப்பினார்கள்....
கோவில் ஊழியர்கள் .... ஆகவே தான் சொல்கிறேன்....
#கேளுங்கள்_கேட்டால்_கிடைக்கும்
 

அன்பு மகளோ ....

”அப்பா...”....
“சொல்லுப்பா....’....
”நான் பெருசாகி டீச்சர் ஆகிடறேன்பா...”.........
...
சொன்னது.... முதலாம் வகுப்பில்
வகுப்பு தலைவியா இருக்கும்
என் மகள் வானதி.....
...
”ஏம்பா...டீச்சர் வேலை தான் உனக்கு பிடிக்குமா.....”
”இல்லைப்பா....”..
நீங்க தானே அடிக்கடி பணம் இல்லைங்கறீங்க.....அதான்.....
...
... ஓ.... டாக்டருக்கு படிக்க அதிக பணம் செலாவகும்...
அதனால டீச்சர் ஆகறேன்னு சொல்றயா.....
....
”அதில்லைப்பா...”....
...அப்பறம்.....
...
...”டீச்சர் தானே அடிக்கடி
”டேர்ம் பீஸ்” கொண்டு வா....
டைக்கு பெல்ட்டுக்கு பணம் கட்டு.....
”டியூசன் பீஸ்” கொண்டு வா....
சாட்டர் டே யூனிபார்ம்... ..ஸ்போர்ஸ் டிரஸ்
வாஙக பணம் கொண்டு வா...
தீபாவளி போனஸ் கொண்டு வா....
(அதுக்கு பிரச்சனை பண்ணி நாங்க தரலை)...
இப்படி அடிக்கடி பணம் வாங்கறாங்க....
நிறைய்ய பணம் வசூல் பண்ணி வச்சுருக்காங்க.....
நான் டீச்சர் ஆனா இதே மாதரி எல்லோர்த்துகிட்டையும்
வசூல் பண்ணலாம் இல்லையா.....”....

அனுபவம்

அவசர தேவை...
ஒரு செம்பு சொம்பும்.... போன்சாய் ஆலமரமும்...
... 
வெள்ளிகிழமை...
சமூக நலம் கருதும் அமைப்பொன்றில் ஈகோ பிரச்சனை...
நீங்க வந்து தான் தீத்து வைக்கனுமுன்னு சொல்லிட்டாங்க...
நம்மால முடிஞ்சது போய் குட்டையை குழப்பிட்டு வந்தாச்சு...
...
சனிக்கிழமை...
அண்ணன் தம்பி குடும்ப பிரச்சனை ...
நீங்க வந்தா தான் சுமூகமா முடிப்பீங்க ... பிளீஸ்...னு போன்...
போய் அவங்க அவங்க பிரச்சனைகளை கேட்டதுமே ...
நமக்கு பிபி...ஹை...லோ ...எல்லாமுமே வந்துடும் போல...
எப்படி எப்படியோ பேசி.... கோர்ட்டுக்கு போக வச்சாச்சு.....
....
ஞாயித்துகிழமை..
பல ஆண்டுகளாக தீராத சமுதாய சங்க பிரச்சனை...
அறகட்டளை உறுப்பினர் என்ற முறையில் அழைப்பு....
திடீர் .... ஞானோதயமாக நான் சொன்ன செயல்திட்டங்களை
அமுல்படுத்த முடிவெடுத்து கமிட்டியும் அமைத்து....
செயலாக்கும் பொறுப்பை என் தலையில் கட்டி விட்டார்கள்...
....
திங்கட்கிழமை...
கணவன் மனைவி சண்டை...
பிரச்சனைகளை கேட்க ஒருவன் தயார் என்றதுமே..
அருவி போல கொட்டுகிறார்கள் இரு தரப்புமே...
பல பல சந்தேகங்களை கேட்கிற சாக்கில் அவர்கள் மேல்
அக்கறை இருப்பதாக காட்டியதாலே அவர்கள் பிரச்சனை
முடிந்ததாக எண்ணி சந்தோசமாக வழியனுப்பி வைத்தார்கள்...
....
செவ்வாய்கிழமை....
..
...
...
...
....
....
...
....
...
..
.
.
காலை 7 மணிக்கு போன்.
...
என்னது...
..
அப்படியா...
...
இதோ இப்போ வந்துடறேன்...
...
.
.
.
.
திரும்பி பார்த்தா வூட்டம்மா.....
வாசல் தொளிச்சு கோலம் போட்டுட்டு வந்தாங்க
....
போங்கடா நீங்களும் உங்க பஞ்சாயத்தும் ....
ஒரு டீக்கும்... பண்ணுக்கும் .... மீறி போனா சனிக்கிழமை
அண்ணன் தம்பினால அதிர்ஷ்டமா கிடைச்ச பிரியாணிக்கும்
பஞ்சாயத்து பண்ணிட்டு இருந்தா எங்க வூட்டுல ...
”ஏனுங்க உங்க கட்சி சின்னம் இதுதானேன்னு .....
வெளுக்குமாத்த தூக்கிடுவாங்க .......
அப்பறம் நான் பஞ்சாயத்தை கூட்டனும்.....

Thursday, December 12, 2013

தகவல் உரிமை சட்டம்

ஒரு இந்து கோயிலை அறநிலையத்துறை
கையகபடுத்தினால் அதன் அதிகாரிகள் 1951ம் ஆண்டு 
சட்டபிரிவு 25 மற்றும் பிரிவு 29ன் கீழ் 
ஒரு சொத்து பதிவேடு உருவாக்க வேண்டும்...

அதில் கோயிலுக்கு சொந்தமான நகைகள், 
அசையும் சொத்துக்களும்,நிலங்கள்,மரங்கள் உள்ளிட்ட 
அசையா சொத்துக்களும், கோயிலின் மரபுகள்,விழாக்கள்,
சன்னதிகள்,சிலை விபரங்கள், பூஜை முறைகள்,
கட்டளை விபரங்கள், அறங்காவலர்கள் குறித்த விபரங்கள்
அனைத்தும் இடம்பெற்று பராமரிக்க வேண்டும்....
இது அறநிலையத்துறையால் நியமிக்கபடும்
கோயில் நிர்வாகிகளின் அடிப்படை கடமை ஆகும்...

இந்த பதிவேடுகள் ஒழுங்காக பேணபட்டு வருகிறதா என
கண்டறிய ”தகவல் உரிமை சட்டபடி” தமிழகத்தின்
25 முக்கிய கோயில்களில் கேள்விகள் கேட்டதற்கு...
சில கோவில்கள் பதிலே தரவில்லை...

தர மறுத்து வித்தியாசமாக வந்த பதில்களில் சில...

பழனி - ரிஜிஸ்தர் மிகவும் நைந்த நிலைமையில் உள்ளது
வடபழனி - தேடி பார்த்தோம் ரிஜிஸ்தரை காணவில்லை
திருச்செந்தூர் - ரிஜிஸ்தர் மிக பெரியது படி எடுக்க முடியாது.

ராமேஸ்வரம் - அதிகாரிக்கு வேலை பளு அதிகம் ஆகவே
தரமுடியாது. பதில் தந்தால் அலுவலகமே ஸ்தம்பித்து போகுமாம்...
திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில் - ரிஜிஸ்தர் நகல்
கொடுத்தால் அதை வாங்கியவர் கிரிமினல் நடவடிக்கை
செயல்கள் செய்யகூடிய வாய்ப்பிருப்பதால் தர இயலாது.

கிட்டதட்ட எல்லா கோவில்களும் ஒன்று போல பிரிவு 30,31ன்
கீழ் செய்ய வேண்டிய ஆண்டு விபரங்களின் சேர்க்கை,
பத்து வருடங்களின் தொகுப்பு ஆகியன நடைபெறவில்லை
என்று பதில் அளித்துள்ளனர்...
இவையெல்லாம் மிகப்பெரிய கிரிமினல் குற்றங்களாகும்...

SaravanaPrakash Tirupur
http://www.mediafire.com/?j2fivj36ms6fpk6

Friday, November 29, 2013

துரோகிகளை தண்டிக்க....

உனக்கு துரோகமிளைத்தவனை 
எவ்வண்ணமெல்லாம் நீ தண்டிக்கலாம் ?

அகால இரவொன்றில் அவன் அறைக்குள் 
பெட்ரோலூற்றி நெருப்பு வைக்கலாம்,

நல்லவிதமாய் உறவாடி நயவஞ்சக காய்களை 
நகர்த்தி வாழ்வின் பெரும்பாதாளத்தில் கவிழ்கலாம்,

ஊர்பூராவும் அவனை பற்றி அவதூறு பரப்பலாம்,
பார்க்கிற இடத்திலெல்லாம்
பளாரென அவனை அறைய சீறிபாயலாம்,

விடுதியொன்றில் எதேச்சையாய் சந்திக்க
நேர்கையில் முகத்தில் உமிழ்ந்து அவமதிக்கலாம்,

கூலிப்படை கொண்டு குரூரமாய் தாக்கி ஊனப்படுத்தலாம்,

அவன் குடும்பத்தில் உட்பூசல் உண்டாக்கி நிலை குலைக்கலாம்.

காலம் முழுக்க அவன் செய்ததை
எண்ணி எண்ணி சபித்து கொண்டே இருக்கலாம்,

ஒவ்வொரு பொழுதும் அவன் நிம்மதியை அழிக்க‌
ஒரு பொல்லாததை செய்தவாறே இருக்கலாம்....

என்றாலும் எவ்வளவு பழிவாங்கினாலும்
உன் மனரணமும் அழுத்தமும் சினமும் பழியும்
குறையப்‌ போவதே இல்லை....

ஆதலால் நீஅவனை மன்னித்துவிடலாம்...

படித்ததில் பிடித்தது...

கேட்டால் கிடைக்கும்


இன்று (13.11.2013) என் கொழுந்தியாவின் திருமணம்... 
கொங்கு நாட்டின் புகழ்பெற்ற சிவன்மலை..கோயிலில்....

சுற்றத்தாரிடம் குசலம் விசாரித்து கொண்டிருந்த என்னை...
சாட்சி கையெழுத்து போட கூப்பிட்டார்கள்... 
(அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நான்)
....
அலுவலகத்தில் தேவையான ஆவணங்களை
சமர்பிக்கும் போதே திருமண கட்டணம்
மொத்தம் ரூ.1500/.... என சொல்லியிருந்தார்களாம்... 
கடைசியாக கையெழுத்து போட்ட என்னிடம்
ரூ 1500 கொடுத்து கொடுக்க சொன்னார்கள்....
(எந்த ரூபத்திலும் சனி தேடிவரும் போல...)

திருமண கட்டண ரசீது -ரூ.250
கோவில் உபயவரவு ரூ.500
கேமரா கட்டணம் ரூ.100 என மூன்று ரசீது தந்தார்கள்....
ரூ.1500 பணம் கொடுத்துட்டு ரசீதுகளை வாங்கி பார்த்த நான்
அருகிலிருந்த ... என் மனைவியின் தம்பியிடம் .......
”மீதி ரூ.650... தருவாங்க .. ஒழுங்கா வாங்கிட்டு வா”னு சத்தமாக
சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் வந்துட்டேன்.....
மறு பேச்சு ஏதுமில்லாமல் ரூ 650 கொடுத்தனுப்பினார்கள்....
கோவில் ஊழியர்கள் .... ஆகவே தான் சொல்கிறேன்....
கேட்டால் கிடைக்கும்

Wednesday, October 16, 2013

தோள் சாய்ந்த தோழமை நினைவுகள்...

நேசமோடு உன்னை நேசித்த போது
நெருப்பாக சுட்டாய்...
அன்போடு அறிவு தெளிவோடு பழகியபின் ...
வாஞ்சையோடு வாழலாம் என்ற போது
கனிவாய் கசிந்துருகி காத்திருக்க சொன்னாய்....
வாழ்வில் ஒரு திருப்பம்....
வஞ்சனை செய்தவனானேன்.....

தோழமையோடு தோள் கொடுத்து
நான் செய்த உதவிகளுக்கு....
காலத்தினால் நீ செய்தவை
ஈடாகுமா இனியவளே....

மண்வீடு கட்டி மனசு பூரித்ததும்
துக்கமயமான இடுகாட்டில்
இட்டுகட்டி நம்மை பேசியதும்...
துன்பத்திலும் இன்பமாக நாம் பேசியதும்...
இனியும் வருமா இனியவளே...

கண் காணாமல் போனால்
கவலை மறக்கலாம்...
காலம் நமக்கு கருணை காட்டலாம்...
எண்ண அலைகள் மோதும் உன் உள்ளம்...
என் நினைவு உண்டா... என ஏங்கும் என் உள்ளம்..
இம்மியளவும் மாறாது நம் இருவர் உள்ளம்...
கடல் தாண்டி கல் திரை இட்டு மறைத்தாலும்
மனதோரம் இருக்குமே சரவணனின்
தோள் சாய்ந்த தோழமை நினைவுகள்...

முகநூல் பக்கத்திலிருந்து....



அழகு ஓவியமே .... 
அதிர வைக்கும் கொழுசு கட்டி ஆடி வரும்
அழகான மான்குட்டியே..... 
சேலை கட்டினால் 
சோலைகள் சலசலக்குமே....

எள்ளி நகையாடினால் எரிமலையாகுபவளே...
பணியிலும் திமிரு காட்டியவளே....
பூ போன்றவளே ...
புயலாக மாற தயங்காதவளே....

சில நாட்கள் பழகினாலும்
பல யுகங்கள் மனத்திரையில் மறையாதவளே...

அழைத்தால் வந்திடுவேனென்று ...
அழைக்க மறுந்தவளே .... என்னை மறக்க நினைப்பவளே...
நீவிர் வாழ்க பல்லாண்டு... வள்ளுவன் வகுத்த குறள் போல...

செக்க செவந்தவளே...
செப்டம்பரில் மணம் முடிக்க இருப்பவளே.... நீவிர் வளர்க
செந்தமிழின் செழுமை போல.........
செங்கரும்பின் இனிமை போல......
தெவிட்டாத தேனின் சுவை போல ...

நவரத்தினங்களை பெற்று நலமுடன்
இப்பூவுலகில் வளமோடு வாழ வாழ்த்துகிறேன்..


இரட்டை கோபுரங்களை தகர்த்த செப்டம்பர்-11 ...

என் உள்ளமெனும் பூஞ்சோலையில்
வண்ணத்து பூச்சியாக ரீங்காரமிட்டு வந்த
என் தோட்டத்து வெண்ணிலா 
தாமரை போன்ற மேடையிலே
உகந்த மணாளன் கைபற்றி 
உன்னதமான வாழ்வின் அடுத்த அடியான
மனையாள் ஆனாளே.... இன்று...

மனம் மகிழ்கிறது.... 
கிஞ்சித்தும் வருத்தமில்லை....
காண கண் கோடி வேண்டுமே ... நீ
தாங்குவாயோ என்றா நல்லதோர் எண்ணத்தில்
அழைக்க மறந்தாலும் என் உள்ளமெல்லாம்
உங்கள் நலம் சார்ந்தே இயங்குகிறதே .....
வாழ்வீர் நீவிர் வையம் போற்ற......

என்றேனும் என் நினைவுகள்
வந்தால் தோள் சாய்ந்த தோழன்
ஒருவன் இருந்தானே என்ற உன் நினைவுகளே
என்னை மகிழ்விக்கும்... நானறிய வழியில்லையே...

நாலும் தெரிந்தவன் என்றும்
நல்லதொரு தோழன் என்றும்
சிந்திப்பதில் சிந்து பாத்ம் தோற்றானே என்று
சிலோகித்து நீ சொன்ன வார்த்தைகளும்
என் மனக்கண்ணில் வந்து போகுதடி....

இன்னொருவனுக்கு சொந்தமாகி விட்டாய்...
இன்றோடு உன் நினைவுகளில்
எனக்கு சொந்தமானதை மட்டும் வைத்திருந்து
வாழ்கிறேன்.....

பேரிட்சை பழம் போல
பெரிய உதட்டுக்காரி......
கடிதமெழுத சொன்ன கண்மணியே...
எழுதிவிட்டேன் என் இறுதி கடிதம் தனை...

பாவியிவன் பார்வை பட கூடாதென்று
பறக்க போகும் பாவையே....
மதியூகியாய் இருந்தவளே....
மனமெல்லாம் நிறைந்தவளே....
காலமெலம் நீ கண் கலங்கமல் வாழனும்....
என்றும் என்னிடம் நீ என்னால் முடிந்த
உதவிகளை எதிர்பார்க்கலாம்.. நண்பனாய்...
உதவ காத்திருக்கிறேன் ... உத்தமியே.......

என் எண்ணங்கள் உன் வண்ண வாழ்வின் நலனையே விரும்புகிறது...
வாழ்க பல்லாண்டு ..... பல்லாயிரத்தாண்டு......


தோள் சாய்ந்த தோழமை நினைவுகள்...
முகநூல் பக்கத்திலிருந்து....

Monday, July 8, 2013

எனது முகநூல் பக்கதிலிருந்து....

நம் கைக்கு வரும் பெரிய தொகைகள் கூட
மதிப்பில்லாத சிறியதொகையாக `இவ்வளவுதானா`
என்ற ஏக்கத்தோடு வாங்க வேண்டியதிருக்கிறது...

நாம் கொடுக்கும் சிறிய தொகையை கூட
`இவ்வளவு` கொடுக்கனுமா? என்ற
அங்கலாய்ப்பு மனதை விட்டு அகல மறுக்கிறது......

எனக்கும் மட்டும் தான் இப்படியா......?

....

கொங்கு தனி மாநிலத்தை உருவாக்குவோம்-பெஸ்ட் ராமசாமி

எதுக்குங்க சார் .... ரம்மி ஆடவா..... 
(திருப்பூர் நண்பர்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்)

...

தமிழகத்தில் மேலும் 11 லட்சம் 
மின் இணைப்புக்கள் வழங்கப்படும்,- முதல்வர்.....

ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லை...
அவனுக்கு 56 பொண்ட்டாட்டி கேக்குதாமாம்.........?....

...

தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - தமிழக அரசு...

ஜூன் 3 ன் தேதி கலைஞரின் பிறந்தநாள் என்பதால், கலைஞரின் பிறந்த நாளை கொண்டாடவே விடுமுறை ....

...

நிறைவேறாத காதலும் காமமும்
சில நேரங்களில்
கற்பனை துளிகளிலேயே முடிந்துவிடுகின்றன

...

எதுவும் கடந்து போகும் 
என்பதையும் கண்டு கொண்டேன்...
பொறமையை கூட
பொசுக்க கற்று கொண்டேன்...
துரோகத்தையும் ஏற்கும் 
பக்கவம் அடைந்து விட்டேன்...
கோபத்தை கூட 
கொன்றொழித்து விட்டேன்...
மோகத்தை வெல்ல ஒரு வழி கண்டேன்
எனில் ஞானம் தனை அடைந்திடுவேனே .....

...

டீசல் பெட்ரோல் விலை ஏறிவிட்டது என்று மக்கள் யாரும் நடந்தா போகிறார்கள்......-ஞானதேசிகன்-

நான் அப்பவே சொன்னேன்ல...
தம்பி பார்க்கத்தான் பொரி உருண்டை மாதரி இருப்பாரு ..
நல்லா கருத்தா பேசுவாப்லன்னு...

...


Saturday, June 22, 2013

"தங்கம் வாங்காதீர்கள்”

நாட்டு நலனில் (இதில் மட்டும்)
அக்கறையுள்ள நிதியமைச்சர் சொல்கிறபடி

”மக்களே தயவு செய்து தங்கம் வாங்காதீர்கள்”

தங்கம் ஒரு தேசத்தின் கையிருப்பில் இருந்தால், அந்த தேசத்துக்கே மதிப்பு அதிகம். அதே தங்கம் தேச மக்களிடம் அதிகமாக இருந்தால் அதன் மதிப்பு மிகவும் ஆபத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் , உலகிலேயே ஒரு பொருளை உற்பத்தியே செய்யாமல், அதே பொருளை உலகிலேயே அதிகமாகப் பயன்படுத்தும் ஒரே நாடு இந்தியாதான்.

அதாவது ஒரு கிராம் தங்கம்கூட உற்பத்தி செய்யாமல், ஏற்றுமதியும் செய்யாமல், அதே தங்கத்தை அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்வதால், நாம் செலுத்தவேண்டிய அந்நியச் செலாவணி அதிகமாகிறது. அதாவது, மென்பொருள் ஏற்றுமதி செய்து சம்பாதித்த காசை தங்கமாக இறக்குமதி செய்து வீணடிக்கிறோம். ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகும்போது அந்த நாடு ஏழை நாடுகளின் பட்டியலுக்கு விரைந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

17000 டன் தங்கம் இந்தியர்கள் கையில் இருக்கிறது என்கிறார்கள். ஆண்டுக்கு 400 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. அதே சமயம், சீனா தனக்கான தங்க ஏற்றுமதியை அதிகப்படுத்திக்கொண்டே வருகிறது. இந்தியாவுக்கு தங்கத்தை ஏற்றுமதி செய்துவிட்டு அதன் வீழ்ச்சிக்காக சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கிறது நமது எதிரி நாடான சீனா...

இன்றைய தேதியில், இந்தியப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் நமது தங்க இறக்குமதி. இந்தியர்களிடம் அதிகத் தங்கம் இருக்கிறது என்பது பெருமைக்குரிய செய்தி இல்லை.அதனை சீர் செய்ய வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்தாலோ, கையிலிருக்கும் காசு , காசாகவே நிலைக்கவேண்டும் என்று நினைத்தாலோ, தயவு செய்து தங்கம் வாங்காதீர்கள்

நாம் தங்கத்துக்கு செலுத்தும் மதிப்பு அதன் உண்மையான மதிப்பு இல்லை. உண்மையில், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் வேலையாள் செலவுகள் மற்றும் லாபம் சேர்த்து, ஒரு கிராம் தங்கம் இன்றைய தேதிக்கு 589 ரூபாய் வரை விற்கமுடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது அதன் பயன்பாட்டு மதிப்பு அவ்வளவுதான். அப்படியானால், நாம் கொடுக்கும் 2500 சொச்சம்...? அதற்கான பண்ட மாற்று மதிப்பு! அது என்று வேண்டுமானாலும் தொபுக்கட்டீர் என்று பள்ளத்தில் விழுந்து மொக்கையாகி கிராம் 1000 ரூபாய்க்கு வர வாய்ப்பிருக்கிறது.
நன்றி சுரேகா

Friday, March 29, 2013

அன்புள்ள ஆசிரியருக்கு ....

ஆப்ரகாம் லிங்கன் தன்னுடைய மகனின் 
பள்ளி ஆசிரியருக்கு எழுதிய அற்புதமான கடிதம் 
அனைவருமே படிக்கவேண்டிய கடிதம் 
சாரு நிவேதிதா அவர்களின் இணையதளத்திலிருந்து .....

அன்பு மிக்க ஆசிரியருக்கு,

எனது மகன் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது

எல்லா மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல. எல்லா மனிதர்களும் உண்மையானவர்கள் அல்ல. ஆனால் அவனுக்கு கற்றுக்கொடுங்கள்… ஒவ்வொரு போக்கிரி உள்ள இடத்திலும் ஒரு வீரன் உண்டு; ஒவ்வொரு சுயநலமான அரசியல்வாதி உள்ள இடத்திலும் ஒரு தன்னலம் கருதாத தலைவன் உண்டு. ஒவ்வொரு பகைவனுக்கு இடையிலும் ஒரு நண்பன் உண்டு.

இதற்குக் காலம் அதிகம் எடுத்துக் கொள்ளும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களால் முடியுமானால் அவனுக்கு கற்றுக் கொடுங்கள். நாம் ஈட்டியது ஒரு டாலர் என்றாலும் கண்டெடுத்த ஐந்து டாலர்களைக் காட்டிலும் அது மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.

தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவனை விலகி இருக்கச் சொல்லுங்கள்.

மனம்விட்டு சிரிப்பதன் ரகசியத்தை அவனுக்கு கற்றுக் கொடுங்கள். நயவஞ்சகர்களை எளிதில் அடையாளம் காணவும் ஆரம்பத்திலேயே அவன் கற்றுக் கொள்ளட்டும்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். மேலும், வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும் பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கு அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரடர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி அளியுங்கள்.

கும்பலோடு கும்பலாகக் கரைந்து போய் விடாமல் எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

எல்லா மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். என்றாலும் அதையெல்லாம் வடிகட்டி நல்லவற்றை மட்டுமே பிரித்து எடுத்துக் கொள்ள அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணீர் சிந்துவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், வெற்றுப் புகழுரைகளைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

நம் திறமையையும், அறிவாற்றலையும் விற்பதில் தவறே இல்லை; ஆனால் அது நமது மனசாட்சியையும் ஆன்மாவையும் பணயம் வைப்பதாக இருந்து விடக்கூடாது என்பதை அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

பெருங்கும்பல் திரண்டு வந்து கூச்சலிட்டாலும், நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்டுவதற்காகத் தொடர்ந்து போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை அளியுங்கள்.

அவனை அன்பாக நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம் கொடுத்து மற்றவர்களைச் சார்ந்திருக்க வைத்து விட வேண்டாம். ஏனென்றால் புடம் போட்ட இரும்பு மட்டுமே மிகச் சிறந்ததாக மாறுகிறது.

தவறு கண்டால் கொதித்து எழும் துணிச்சலை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். அதே வேளையில்தனது வலிமையை மௌனமாக வெளிப்படுத்தும் பொறுமையை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

அவன் தன்மீதே மகத்தான நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவன் மகத்தான நம்பிக்கை கொள்வான்.

இது ஒரு மிகப் பெரிய சவால்தான்; இருந்தாலும் இதில் உங்களுக்குச் முடிந்ததையெல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுத்து விடுங்கள்.

அவன் மிக நல்லவன், எனது அன்பு மகன்.

ஆப்ரஹாம் லிங்கன்.

நன்றி ..சாரு நிவேதிதா ...அவர்களின் இணையதளம்

Wednesday, March 6, 2013

நன்றி

மக்கள் பிரச்சனை கூட இல்லை
ஒரே ஒருத்தர் வீட்டு பிரச்சனை.....(வாய்க்கா தகராறு)...
எத்தனையோ அதிகாரி வந்தார்கள்....(வர வைத்தேன்)
`கவின்சிலர் கிட்ட சொன்னீங்களா`ன்னாங்க..
இல்லைங்க... சட்டபடி என்ன பண்ணனுமோ அதை செய்ங்கன்னேன்....

`ஒரு வார்த்தை அவர்கிட்ட சொல்லுங்க`ன்னாங்க....
அழைத்தேன்.....நேற்று மாலை... (அரை மனதோடு)
சுருக்கமா சொன்னேன்....
பார்க்க எப்ப வரலாமுன்னேன்....
`நானே வரேன்.. இடத்தை சொல்லுங்க`
சொன்னேன் ....

எந்த பந்தாவும்மில்லாமல் .....
இன்று காலை 7.30 க்கு வந்தார்
மாற்று கட்சிகாரர்.... சொந்த கட்சிக்காரர்....
ஓட்டு அரசியல் ........ எதையும் பார்க்காமல்
உடனடியாக ஞாயமான தீர்வு சொல்லிவிட்டு
முழுக்க ஆதரவு தெரிவித்துவிட்டு பறந்தார்.....

நன்றி கலந்த பாராட்டுக்கள்...
திருப்பூர் 52 வது மாமன்ற உறுப்பினர்
திரு.கோவிந்தராஜ்.....தேமுதிக...
பாராட்ட... 98422 43356

Tuesday, March 5, 2013

கேட்டால் கிடைக்கும்,

ஏழ்மை நிலையில் உள்ள உறவினர் இறந்ததிற்கு 
குடுபத்தினர் இறப்பு சான்றிதழ் வாங்க சென்றிருக்கிறார்கள்... 

பணம் 200 தந்தால் தான் தர முடியும் என சொன்னார்களாம் ..... 
திருப்பூர் பழனியம்மாள் பள்ளி எதிரே உள்ள 
பிறப்பு இறப்பு சான்று வழங்கும் அலுவலக ஊழியர்
ராஜேந்திரன் (92456 03242).........

நான் சென்றேன்.....

ராஜேந்திரன் யாருன்னு கேட்டு சீட்டை காட்டி எவ்வளவு பணம் தருனுமுன்னு சத்தமாக கேட்டேன்....

ஒன்னும் தரவேண்டாங்க ...
அதிகாரி கையெழுத்து போட லேட் ஆயிருச்சு
இந்தாங்க சான்று என கைமேல் கொடுத்து அனுப்பி வைத்தார்

தெரியாமத்தான் கேக்கறேன் என்னை பாத்தா உங்களுக்கு எப்படிங்டா தோனுது.................



Saturday, March 2, 2013

ஆறடி மண் கூட இல்லை

இதயம் பலவீனமானவர்கள்
கடனில் மூழ்கி தத்தளிப்பவர்கள்
வருமானத்திற்க்குள் வாழ்க்கை நடத்த முடியாதவர்கள்
தயவு செய்து படிக்க வேண்டாம்.....

அய்யா புண்ணியவான்களே......
ஒரு 3 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் கடனுக்கு 
வட்டி கட்ட முடியாம கஷ்ட படறேன்.............
ம்....ம்...ம்.....ம்.....ம்............ம்....ம்.......ம்...........

ஆறடி மண் கூட உங்களுக்கு சொந்தம் இல்லை.....
அதுக்கு கூட மின்மயானம் வந்துருச்சு......

பிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்!

டெல்லி: முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.

இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியல்:

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது.