Monday, August 4, 2008

குசேலன் புறக்கணியுங்கள்!!!

"ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்

"ரஜினி ஒரு சந்தர்ப்பவாதிதான் பிழைக்க தமிழ் ரசிகர்களை சுரண்டி பிழைத்ததெல்லாம் மறந்து விட்டாயா? அல்லது ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின் பொழுது நீ உணர்ச்சி பொங்க நடித்து தமிழனை ஏமாற்றினாயே! அதுவும் மறந்து விட்டதா?...
"ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்"

திரைப்பட வெளியீட்டிற்கும் தன் குடும்பத்தை மறந்து, தன் குழந்தைக்கு குடிக்க கஞ்சியில்லாத போதும் உன்னுடைய கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணியவன் உன்னுடைய பாழாய் போன தமிழ் ரசிகன்.

தமிழ் நாட்டில் சம்பாதிதத்தை எல்லாம் கர்நாடகாவில் முதலீடு செய்த உன்னை தான் தமிழ் ரசிகன் முழு முதற் கடவுளாய் பார்க்கிறான்.காலத்திற்கு தகுந்தாற் போல் மாறுவது பெரிய மனிதனுக்கு அழகா?. என்றும் ஒரே பேச்சு பேசுபவன் தான் பெரிய மனிதன்.
தமிழ் நாட்டு ரசிகன் முன்பு "தமிழன்" என்று கூறியே பல கோடிகளை சம்பாதித்து, இன்று கன்னட அமைப்புகள் முன்பு கன்னடத்திலேயே மன்னிப்பு கேட்ட மானங்கெட்டவனின் மதி கெட்ட பேச்சுகள் சில...

1995 - பாட்சா: இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை...அன்பால தானா சேர்ந்த கூட்டம்....!

2007 - சிவாஜி:பன்னிங்கதான் கூட்டமா வரும்....!

1996 - சட்டசபை தேர்தல்:ஜெயலலிதாக்கு ஒட்டு போட்டா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது....!

2004 - மக்களவை தேர்தல்:சகோதரி ஜெயலலிதா ஆதரவு பெற்ற கட்சிக்கு ஒட்டு போட்டேன்....!
சகோதரி ஜெயலலிதா ஒரு தைரியலக்ஷ்மி....!

2008 - ஒகேனக்கல் உண்ணாவிரதம்:நம்ம உரிமைய தடுக்குறவங்கள உதைக்க வேண்டாமா?

2008 -குசேலன்:அய்யா மன்னிச்சுடுங்க.....என் தப்பை உணர்ந்துட்டேன்....தயவு செய்ஞ்சு என் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க.....!

ஐய்யா....அம்மா....!தமிழா!! மாற்றானுக்கு மண்டியிட்டது போதும்... ஆண்டாண்டு காலமாக திரையுலகினற்கு நீ தீப்பந்தமாய் இருந்தது போதும்..இளிச்சவாய் தமிழனே, இனியாவது விழித்துக்கொள்!மானமுள்ள தமிழர் யாவரும் இந்த குசேலன் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதை புறக்கணியுங்கள்!...

2 comments:

Unknown said...

நன்றி-வெட்டிபயல்களே

கிருத்திகா said...

உன்மையை கண்டுப்பிடிப்பது கஷ்டம்

அதை எளுதுறது இன்னும் கஷ்டம்.

நல்லா இருக்கு.

புது பதிவு போட்டிருக்கேன்.

வந்து பாருங்க